உடுமலை, நவ.19- ஊரக வேலை திட்டத்தை தளி பேரூராட்சி யில் அமல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று தளி பேருந்து நிறுத்தம் அருகில் உரிமை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை தாலுகா தளி பேரூராட்சியில் திருமூர்த்தி மலை, குருமலை மலைவாழ் மக் கள் குடியிருப்புகள் உட்பட மொத்தம் 17 வார் டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் விவ சாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊரக வேலை திட்டத் தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு செயலாளர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கி.கனகராஜ், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் பாலதண்ட பாணி, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் அருண்பிரகாஷ், ராஜகோபால், தமிழ் தென்றல், மாசாணி, ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். சுப்பிரமணி, குமரேசபாண்டியன், பொன்னலாம்மன் சோலை தேவராஜ், ரவி, சின்னப்பன், கோபாலகிருஷ்ணன் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தளி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவாவிடம், பேரூராட்சி யில் ஊரக வேலை வழங்கக் கேட்டு மனு அளிக்கப்பட்டது. கருப்புசாமி நன்றி கூறி னார்.