நாமக்கல், செப்.29- மக்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் மாதேஸ்வரனிடம் மார்க்சிஸ்ட் கட்சி யினர் மனு அளித்தனர். நடைபெற்று முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதி யில் திமுக கூட்டணி சார்பில் போட்டி யிட்ட கொமதேகவைச் சேர்ந்த மாதேஸ் வரன், எலச்சிபாளையம் ஒன்றியம் முழு வதும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. அப்போது மாதேஸ்வரன் எம்.பி.யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் கவுன்சிலர் சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங் கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் ஆர்.ரமேஷ், எம்.பாலகிருஷ்ணன், ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் மனு ஒன்றை வழங்கினர். அம்மனுவில், எலச்சி பாளையம் சூரப்புலி அம்மன் கோவில் முதல் அகரம் வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும். அகரம், கொத்தம் பாளையம், சீத்தக்காடு, ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி அகரத்தில் புதிய ரேசன் கடை ஒன்று அமைக்க வேண்டும். முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நிதி ஒதுக் ்கீடு செய்த புதிய நூலக கட்டிடப் பணி யினை தொடங்க வேண்டும். எலச்சி பாளையத்தில் தீயணைப்பு துறை, பத்தி ரப்பதிவு துறை உள்ளிட்ட அலுவல கங்கள் அமைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டுள்ளன.