districts

img

திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்

திருப்பூர், ஜூலை 29 – திருப்பூர் உள்ளிட்ட இம்மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. வீட்டுமனைப் பட்டா, குடிநீர், சாலை,  சாக்கடை உள்ளிட்ட மக்களின் அடிப் படை தேவைகள் மற்றும் லஞ்ச, ஊழ லுக்கு எதிராகவும், நூறு நாள் வேலைத்  திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்  என வலியுறுத்தியும் கிராமப்புறம், நகரப் புறம் என நூற்றுக்கும் மேற்பட்ட பகு திகளில் மக்கள் கோரிக்கையை வலியு றுத்தி பிரச்சாரம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாநகரத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம்  தலைமையில் நடைபயணம், கிழக்குப்  பகுதியில் மாநகரக்குழு உறுப்பினர்  செந்தில்குமார் தலைமையில் நடைப யணம், கருவம்பாளையம் பகுதியில்  மாநகரக்குழு உறுப்பினர் பா.ஞானசே கர் தலைமையில் இருசக்கர வாகனப் பிரச்சாரம், ராயபுரம் பகுதியில் மாநக ரக்குழு உறுப்பினர் பி.பாலன் தலை மையில் இருசக்கர வாகனப் பிரச்சாரம்  என மொத்தம் 40 மையங்களில் நடை பெற்றது. தெற்குப் பகுதியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.மணிகண்டன்,

கரு வம்பாளையம் பகுதியில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகி ருஷ்ணன், ராயபுரம் பகுதியில் மாவட் டக்குழு உறுப்பினர் பி.செல்லதுரை,  கிழக்குப் பகுதியில் தெற்கு மாந கரச் செயலாளர் த.ஜெயபால் ஆகி யோர் துவக்கி வைத்தனர். இப்பிரச்சார பயணத்தில் மாநகரக்குழு உறுப்பி னர்கள் கே.பொம்முதுரை, த.ஆறுக் குட்டி, நா.சஞ்சீவ், எஸ்.பானுமதி மற்றும் கிளைச் செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், வாலி பர், மாதர் சங்க நிர்வாகிகள், முன் னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜி.ஈஸ்வ ரமூர்த்தி, ஜி.ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். திருப்பூர் வடக்கு மாநகரப் பகுதி யில் மக்கள் சந்திப்பு இயக்கம்,வடக்கு நகரச் கமிட்டி சார்பில் ஞாயிறன்று இரு  மையங்களில் இருந்து இரு சக்கர வாகன பிரச்சாரமாக நடைபெற்றது. எம்.எஸ்.நகரில் துவங்கி அம்பேத் கர் நகர், நெசவாளர் காலனி, திருமலை  நகர், எஸ்வி.காலனி,குமரானந்தபுரம், சிவன் தியேட்டர் மையம், அண்ணா  காலனி, பத்மாவதிபுரம், காந்தி நகர்,  தியாகி பழனிசாமி நகர் மையம், முருங் கப்பாளையம் வழியாக சரளக்காட்டில்  நிறைவடைந்தது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, வை. ஆனந்தன், மாநகரக்குழு உறுப்பினர் கள் எஸ்.ராஜேந்திரன், பொன்.பாலகு மாரன், வி.தமிழ்வாணன், டி.ராம் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண் டனர்.  மற்றொரு குழுவினர் கருமாரபா ளையம் பஸ் நிறுத்தத்தில் துவங்கி,  கோல்டன் நகர், பிஎன்.ாளையம், என். ஆர்.கே.புரம், முத்துநகர், கொடிமரம்,  ஏகேஜி நகர், பிரிஜ்வேகாலனி, லட்சுமி  நகர், ராம் நகர், ராமமூர்த்தி நகர், அவி னாசி ரோடு, ஓடக்காடு, காலேஜ் ரோடு  வழியாக சரளைக்காட்டில் பிரச்சார இயக்கத்தை முடித்தனர்.  இதில் வடக்கு மாநகரச் செயலா ளர் பி.ஆர்.கணேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் பா.சௌந்தர்ராஜன், ஆர்.நந்தகோபால், பி.மனோகரன், ஈ. வளர்மதி, ஒய்.அன்பு, கே.நாகராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர். மொத்தம்  12 மையங்களில்  இந்த பிரச்சார இயக் கம் நடைபெற்றது.  நிறைவாக சரளக் காடு பகுதியில் மக்கள் கோரிக்கை  பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு நடைபயணம்  முருகம்பாளையம், வீரபாண்டி, ராக்கி யாபாளையம் ஆகிய மூன்று பகுதிக ளில் நடைபெற்றது.

இந்த இயக்கத்தில்  ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் பவித்ரா, கே. கணேசன், பி.லட்சுமி ஆகியோரும், ஒன் றியக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரம ணியன், எஸ்.குணசேகரன், அங்குலட் சுமி, எஸ்.சண்முகம், ரவிச்சந்திரன்,  கருப்பசாமி, செல்வகுமார் மற்றும்  கிளைச் செயலாளர்கள் கலந்து கொண் டனர். மக்கள்நலக் கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் ஊத் துக்குளி தாலுகா குழு சார்பில் ஞாயி றன்று ஊத்துக்குளி ஆர்.எஸ்-ல்  தொடங்கி அணைப்பாளையம், பாப்பம் பாளையம், புதுப்பாளையம், தேனீஸ்வ ரன்பாளையம், பி.ராமமூர்த்திநகர் வழி யாக ஊத்துக்குளி டவுனில் நிறைவுபெற் றது. ஊத்துக்குளி தாலுகா குழு உறுப்பி னர் கை.குழந்தைசாமி தலைமையில்,  நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார், தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, தாலுகா குழு உறுப்பி னர்கள் கே.ஏ.சிவசாமி, ஆர்.மணியன்,  க.லெனின் மற்றும் கிளைச் செயலா ளர்கள் சுப்பிரமணி, எஸ்.மூர்த்தி, சேகர்,  எஸ்.மாரிமுத்து உள்ளிட்டோர்  பங்கேற்றனர். அவிநாசி தாலுகா வஞ்சிபாளையம்  11 வது வார்டு பகுதியில் மக்கள் சந்திப்பு  இயக்கம் நடைபெற்றது. பனியன் சங்க  நிர்வாகி ஹரிஷ் தலைமையில் நடை பெற்ற இந்த இயக்கத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம் ,சண்முகம், மோகனசுந்தரம், பாலசுப் பிரமணியம், முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.