திருப்பூர், ஜூன் 12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள் பயிற்சி முகாம் திருமூர்த்தி மலை யில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சி.சுப்பிர மணியம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் முகாமைத் தொடங்கி வைத் துப் பேசினார். கட்சியின் அரசியல் மற்றும் ஸ்தாபன செயல்பாடுகள் தொடர்பாக மாநிலக்குழு உறுப்பி னர்கள் என்.பாண்டி, கே.காமராஜர் ஆகி யோர் உரையாற்றினர். தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, ஒன்றிய அள வில் கட்சிப்பணிகள் குறித்து பேசினார். இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.