districts

img

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மூன்று மாதம் சம்பளப் பாக்கி உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 26 - உடுமலை ஒன்றியத்தில் தேசிய கிரா மப்புற வேலை உறுதித் திட்டத்தில் வேலை  செய்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்க ளாக சம்பளம் வழங்கப்படாததைக் கண் டித்து, உடனடியாக சம்பளம் வழங்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பல்வேறு ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கொடிங்கியம் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதைக் கண்டித்தும் உடனடியாக  சம்பளத்தை முழுமையாக வழங்கக்கோரி யும் கொடிங்கியம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில்  கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்த்தென்றல் தலைமையில் கிளைச் செய லாளர்கள் வஞ்சிமுத்து, ஈஸ்வரன் மற்றும் ரத் தினசாமி சக்திவேல், ஆறுமுகம், மயி லம்மாள், பானுமதி, கருப்பாத்தாள் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட் சியில் இதேபோல் நூறு நாள் வேலைத் திட்ட  தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக சம்ப ளம் வழங்காததை கண்டித்து குரல்குட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கி.கனகராஜ் தலைமையில்  கிளைச் செயலாளர்கள் எம்.தட்சிணாமூர்த்தி,  டி.நாகரத்தினம் மற்றும் சசிகுமார், நாச்சி முத்து ராணி, அருக்காணி, மரகதம் கொண் டம்மாள், வேலாத்தாள்  உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். உடுமலை ஒன்றியம் சாலையூர்(தின்னப் பட்டி) ஊராட்சியிலும் இந்தத் தொழிலாளர் களுக்கு உடனடியாக சம்பளத்தை முழுமை யாக வழங்கக் கோரியும் சாலையூர் ஊராட்சி  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதில்.கிளைச் செயலாளர் காளி முத்து, சபரிநாதன், சுப்புலட்சுமி உட்பட ஏரா ளமான பெண்கள் பங்கேற்றனர்.