districts

img

முத்தூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 26 – திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி யில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  வெள்ளியன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கரட்டுப்பாளையம் கிளைச் செயலா ளர் எம்.சுப்பிரமணி, தொட்டியபாளையம் கிளைச் செயலாளர் எஸ்.துரைசாமி ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதில் முத்தூர்  பேரூராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பு  உடனே வழங்கவும், பொதுக் கழிப்பறையை  செயல்படுத்தவும், நூறு நாள் வேலை திட்டத் தில் வேலை வழங்கவும், மயானத்தில் அடிப் படை வசதி மற்றும் பாரதி வீதி, ஜீவாநகர், மலையாத்தாபாளையம் உள்ளிட்ட பகுதி களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்  ஆர்.குமார், மூத்த தலைவர் எஸ்.என்.பழனி சாமி, பி.செல்லமுத்து, எஸ்.தங்கவேல், எஸ். பழனியம்மாள், ஆர்.மல்லிகா, எஸ்.வேலு மணி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற் றினர். கிட்டுசாமி நன்றி கூறினார்.