திருப்பூர், அக்.27- பல்வேறு குளறுபடிகளுடன், சட்ட விதிமுறைகளைப் புறந்தள்ளி அமைக்கப்பட்டுள்ள அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை யிலான நான்கு வழி தேசிய நெடுஞ் சாலையில் பயணிக்க, வேலம்பட்டி சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக் கக்கூடாது. வேலம்பட்டி சுங்கச்சா வடியை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனியன்று தியாகி பழனிச் சாமி நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், அவிநாசி முதல் திருப் பூர் வழியாக அவிநாசிப்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை எண். 381 இல் பல் வேறு குளறுபடிகள் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை முழுமை யாக விதிமுறைகளின் படி இல்லா மல், பல்வேறு விதிமீறல்கள் உள் ளன. குறிப்பாக மொத்தமுள்ள 32 கிலோமீட்டர் தூரத்தில், அவிநாசி பேரூராட்சி, திருமுருகன் பூண்டி நகராட்சி, திருப்பூர் மாநகராட்சி என மூன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 27 கிலோ மீட்டர் தூரம் பல்வேறு குளறுபடிக ளுடன் உள்ளது. பல பகுதிகளில் குறுகலான சாலையாகவும், சாலை யின் இரு புறமும் பல்வேறு ஆக்கிர மிப்புகளும், கழிவுநீர் வடிகால் வசதி முழுமையாக இல்லாமல் சாலையிலேயே வழிந்தோடிச் செல் லும் அவல நிலையும் உள்ளது. குறிப்பாக விதிமுறைப்படி, நான்கு வழிச்சாலைக்கு இணை யாக அமைத்திருக்க வேண்டிய சேவைச் சாலையும், நடை பாதை யும் அமைக்கப்படவில்லை. மொத்தமுள்ள 32 கிலோமீட்டர் தூரத்திற்குள் 60 இடங்களில் சாலைகளை கடக்கவும், 21 இடங்க ளில் போக்குவரத்து சிக்னல்களை யும் ஏற்படுத்தி உள்ளனர். இவ் வாறு நான்கு வழி தேசிய நெடுஞ் சாலைக்கு உரிய வரைமுறை கள் இல்லாமல், நீர் நிலையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி கட்டப் பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். இப்பிரச்சனைக்கு ஆக்க பூர்வத் தீர்வு காண்பதற்கு மாறாக, மாவட்ட நிர்வாகம் மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலை யில், வேலம்பட்டி சுங்கச் சாவடி யில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிக்கை வெளி யிட்டுள்ளது, கண்டனத்திற்கு உரி யது. விவசாயிகள் மட்டுமின்றி திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பின் னலாடை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆயிரக்கணக் கான தொழிலாளர்களும் தினமும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த வட் டார உழைப்பாளி மக்களுக்குத் தேவையில்லாத கட்டண சுமையை ஏற்படுத்தி வரும் வேலம்பட்டி சுங் கச் சாவடியை நீக்க வேண்டும். இந் தக் கோரிக்கையை முன்வைத்து நவம்பர் முதல் வாரத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எதிர்ப்பு இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்துக! திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு கிராமப்புற பகுதிகளில், தெரு நாய்களால் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் குறிப்பாக ஆடு, மாடு, கன்று குட்டிகள் ஆகி யவை கடித்துக் கொல்லப்படும் சம் பவங்கள் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடை வளர்ப்பை நம்பி பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை யில் தெரு நாய்களால் கால்நடை களை இழப்பதும் அவர்களுக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனை யில் தலையிட்டு தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் விவசாயி கள் கோரி வருகின்றனர். இது குறித்து, அரசுக்கு பரிந்துரை செய் வதாக, மாவட்ட ஆட்சியர் கூறியி ருந்தார். எனினும் இன்னும் பிரச் சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு விவசாயி களை பாதிக்கும் இந்த பிரச்சனை யில் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வும், கால்நடை இழப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து காங்கேயத்தை மையப்படுத்தி மிகப்பெரும் இயக்கம் நடத்துவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்டண வசூலிப்பை கைவிடுக! தீபாவளி பண்டிகை நெருக் கடியை பயன்படுத்தி திருப்பூர் மாந கராட்சி நிர்வாகம் மாநாட்டு அரங் கத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள நான்கு மாடி இருசக்கர நான்கு சக் கர வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள் ளது. வணிக நோக்கத்தில் எடுக்கப் பட்டுள்ள இந்த முடிவை மாநக ராட்சி நிர்வாகம் கைவிட வேண் டும். தீபாவளி பண்டிகை சமயம் இங்கு வாகனங்களை இலவசமாக நிறுத்துவதற்கு அனுமதிக்க வேண் டும் என்றும் கேட்டுக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.