தருமபுரி, ஜூன் 16- பாலக்கோடு அருகிலுள்ள தனியார் பள் ளியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த தனியார் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருக்கன அள்ளியிலுள்ள ராதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். நாட்டில் பல இடங்களில் மதக் கலவரங்க ளுக்கு வித்திட்ட இந்த பயங்கரவாத அமைப் பின் பயிற்சி முகாமை கல்வி நிறுவனங்க ளில் நடத்துவது, கல்வி நிறுவனங்களின் ஜன நாயகச் சூழலைக் கெடுத்துவிடும். கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப் படையிலான நிகழ்வுகள் நடத்தக் கூடாது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலை யில், இத்தகைய முகாம்கள் அரசின் வழி காட்டுதல்களை மீறிய ஒன்றாகும். எனவே, இப்பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வும், உடனடியாக இப்பயிற்சி முகாமைத் தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.