districts

img

ஓடையை தூர்வாரும்போது இடிந்து விழுந்த 3 வீடுகள் உரிய இழப்பீடு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கோவை, ஜன.21- சங்கனூர் ஓடையை தூர்வாரும்  பணியின்போது, அங்கிருந்த 3 வீடு கள் இடிந்து ஓடைக்குள் விழுந்த  நிலையில், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். கோவை மாநகராட்சி, 68 ஆவது  வார்டுக்குட்பட்ட ரத்தினபுரி, புது  அண்ணா நகர் பகுதியில், சங்கனூர்  ஓடையையொட்டி சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற் போது ஓடையில் இரு கரைகளில்  காங்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஓடை ஓரத்தில் இருந்த வீடுகளை காலி செய்ய வேண்டும் என மாந கராட்சி அதிகாரிகள் தெரிவித்த னர். இந்நிலையில், திங்களன்று இரவு ஓடையை தூர்வாரும் போது,  3 வீடுகள் இடிந்து ஓடைக்குள் விழுந் தது. இதில் வீடுகளை இழந்து தவிக் கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,  என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் தலைமையில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வடக்கு நக ரச் செயலாளர் எஸ்.நாராயணசாமி, கிழக்கு நகரச் செயலாளர் என். சுபாஷ், வடக்கு நகர கமிட்டி உறுப்பி னர்கள் எஸ்.நிஷார் அகமத், என். சுரேந்திரன் மற்றும்  பாதிக்கப்பட்ட மக்கள், கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் செவ்வாயன்று  மனு அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களி டம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகை யில், ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடை கரைகளில் ஏழை,  எளிய மக்கள் வேறு வழியில்லாமல்  வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந் நிலையில், தடுப்புச்சுவர் கட்டுகி றோம் என்ற பெயரில் மாற்று ஏற் பாடு செய்யாமல், வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஒப் பந்ததாரர்கள் பணிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, திங்க ளன்று இரவு ஜேசிபி இயந்திரம் மூலம் தவறான முறையை கையாண்டத்தில் மூன்று வீடுகள் இடிந்து ஓடையில் விழுந்துள்ளது. இதில், சுரேஷ் என்பவர் தனது வாழ்நாள் சேமிப்பு பணத்தை கொண்டு வீடுகள் போகாது என்ற  நம்பிக்கையில் கட்டிய வீடும் தரை மட்டம் ஆகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்த் துள்ளனர். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட வீடு இடியக் காரண மான ஒப்பந்ததாரர் அந்த இழப்பீட்டு  தொகையை வழங்க வேண்டும். அதேபோல, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உடனடியாக வீடு  வழங்க வேண்டும். மீதமுள்ள நபர்க ளுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை ஓடையில் கட்டுமானப் பணி களை தொடரக்கூடாது. மேலும், இரவு 9 மணிக்கு மேல் இப்பணிகள் செய்வது ஏற்புடையது அல்ல. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் ஜனநாயக சக்திகளை இணைத்து போராட வேண்டிய சூழல் ஏற்படும், என் றார்.