தருமபுரி, பிப்.28- சென்னை பேரணியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட தரும புரி மாவட்ட மாதர் சங்க நிர்வாகி களை தடுத்து நிறுத்தி, ஜனநாயக உரிமையை பறிக்கும் காவல் துறை யின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன் வெளியிட் டுள்ள அறிக்கையில், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை தாக்குதல்களைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், வெள்ளியன்று சென்னையில் தலைமைச் செயல கம் நோக்கி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்பதை தடுக் கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் காவல்துறை யினர் பெண்களை அச்சுறுத்தியுள் ளனர். தருமபுரியிலிருந்து பேருந்து மூலம் சென்னை புறப்படுவதற்கு வருகை புரிந்த பெண்களை வழியி லேயே தடுத்து, பேரணியில் பங் கேற்கக்கூடாது என்று காவல் துறை யினர் மிரட்டியுள்ளனர். மாதர் சங்க தலைவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாகவும், தொலைபேசியி லும் அச்சுறுத்தியுள்ளனர். பேர ணிக்கு செல்ல இயலாதவர்களை, அவர்கள் வீட்டில் இருப்பது போல படம் எடுக்க முனைந்துள்ளனர். இத் தகைய காவல்துறையின் அத்து மீறல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. ஜனநாயக ரீதியில் பேரணி நடத் துவதை சீர்குலைக்கும் நோக்கில் காவல்துறை நடந்து கொண்டது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரா னது. பெண்களின் ஜனநாயக உரி மைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலை முடக் கும் நோக்கில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தரும புரி மாவட்டத்தில் அரசியல் கட்சி கள், வெகுமக்கள் அமைப்புகள் நடத்துகின்ற ஊர்வலம், ஆர்ப்பாட் டம், காத்திருப்புப் போராட்டம் போன் றவற்றுக்கும் அனுமதி மறுக்கும் போக்கு உள்ளது. இத்தகைய போக்கைக் கைவிட்டு ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.