திருப்பூர், டிச.30- திருப்பூர் இந்திரா நகர் மற்றும் நெசவாளர் காலனி பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலை களை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் ஊராட்சிமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டு ரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதமாதம் மின் யூனிட் கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும். மக்களைப் பாதிக்கும் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும். இந்திரா நகர் மற்றும் நெசவாளர் காலனி பகுதிகளில் பழுதடைந் துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும். இந்திராநகர் மேற்கு பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜி. ரேவந்த் குமார், முன்னாள் மாமன்ற உறுப்பி னர் கே.மாரப்பன், என்.கோபால் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். முடிவில் கே. மகேந்திரன் நன்றி கூறினார்.