திருப்பூர், மார்ச் 27- மனிதகுலம் கண்ட மகத்தான சிந்தனையா ளர்களில் ஒருவரான மாமேதை காரல் மார்க்ஸின் 140ஆவது நினைவு தின கருத்தரங்கம் திருப்பூர் ஏவிபி லே அவுட்டில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஏவிபி லே அவுட் கிளை சார் பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்க்ஸின் செறிவான சிந்தனைகளை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்த ரங்கில், இந்தியா குறித்து காரல் மார்க்ஸ் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் கருத்துரை ஆற்றினார். வறுமையைப் போக்குவது குறித்து காரல் மார்க்ஸ் என்ற தலைப்பில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், தேசிய இனங்களின் பிரச்சனைகள் - காரல் மார்க்ஸ் பார்வை என்ற தலைப்பில் மாவட்டக்குழு உறுப் பினர் வே.தூயவன் ஆகியோர் உரையாற்றி னர். காரல் மார்க்ஸின் சித்தாந்தத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் கண்ணோட்டத்துடன் எதிர்மறையாக விமர்சித்தது, தமிழ்நாட்டில் இட துசாரிகள் மட்டுமின்றி முற்போக்காளர்கள், ஜன நாயக சக்திகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியது. அத்துடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸின் 140ஆவது நினைவு தினத்தை எழுச்சியுடன் கடைப்பிடிக்க வும் அறைகூவல் விடுத்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் மார்க்ஸ் மறைந்த தினமான மார்ச் 14ஆம் தேதி நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மார்க்ஸை நினைவு கூர்ந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப் பூர் வடக்கு ஒன்றியத்தில் இக்கருத்தரங்கு ஏற் பாடு செய்யப்பட்டது. வழக்கமாக கருத்தரங்கம் என்பது உள்ளரங்கில் நடத்தப்படும் நிகழ்வாக நடத்தப்படும். ஆனால் ஏவிபிலே அவுட்டில் அனைத்துத் தரப்பினரும் கவனிக்கும் வகையில் பொது நிகழ்வாக ஒலிபெருக்கி ஏற்பாட்டுடன் நடத்தப்பட்டது. மார்க்ஸ் உருவப்படத்துக்கு மல ரஞ்சலி செலுத்தி தொடங்கப்பட்ட நிகழ்வுக்கு ஏவிபி லே அவுட் கிளைச் செயலாளர் நரேந்திர பிர சாத் தலைமை ஏற்றார்.
இக்கருத்தரங்கில் உரையாற்றியோர் மார்க் ஸின் அடிப்படையான சிந்தனைகளை எடுத்துக் கூறினர். குறிப்பாக உலகில் வறுமையைப் போக் குவது பற்றி பலரும் கனவு கண்டு, பல விதமான அறிவுரைகளை, ஆருடங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது, மார்க்ஸ் மட்டுமே விஞ்ஞா னப்பூர்வமாக இப்பிரச்சனையை ஆய்வு செய் தார். முதலாளித்துவ சமுதாயத்தில், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை விட கூடுதலாக அவரது உழைப்பு சக்தியை சுரண்டுவதன் மூலம்தான் உபரி மதிப்பு, லாபம் திரள்கிறது. இதனால் முதலாளிகளின் மூலதனம் தொடர்ந்து பெருகுகிறது. உழைப் பவர்கள் எப்போதும் வறுமை நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அடிப்ப டையை மார்க்ஸ் கண்டுபிடித்தார். எனவே வறு மையைப் போக்கவும், உலகில் ஏற்படும் நெருக் கடியைகளைத் தீர்க்கவும், முதலாளித்துவ அமைப்பு முறையை மார்க்ஸ் காட்டிய வழியே, தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தின் மூலம் சோசலிச சமுதாயமாக மாற்றி அமைக்க வேண் டும். இன்றைய நெருக்கடிசூழ்நிலையில் கிறிஸ் துவ மதத்தலைவர் போப்பாண்டவர், மார்க்ஸின் மூலதனம் நூலை வாசித்து வழி காண வேண்டும் என்று கூறியதை எஸ்.சுப்பிரமணியன் சுட்டிக் காட்டினார்.
தேசிய இனங்களின் பிரச்சனைகளில் பொது வாக மார்க்ஸ் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. மார்க்ஸின் ஆரம்ப கால படைப்புகளிலேயே தேசிய இனங்களின் பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.தேசிய இனங்களின் பிரச்சனைகளில் ஜனநா யகரீதியாக, விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் நலனை முன்னி றுத்தி மார்க்ஸ் ஆய்வு செய்து வழிகாட்டினார். அதன்படியே சோசலிச சோவியத் யூனியனில் தேசியப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இன்று இந்தியாவில் இந்துத்துவ தேசியம் என முன் நிறுத்துவதன் ஆபத்தை சுட்டிக் காட்டி, சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனப் படி மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவை பாது காக்க வேண்டும் என்று வே.தூயவன் கூறினார். அதேபோல் இந்தியாவைப் பற்றி மார்க்ஸ், 1853 ஆம் ஆண்டு மற்றும் 1857ஆம் ஆண்டுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் கட்டுரைகள் எழுதியிருந்ததை கே.ரங்கராஜ் எடுத்துரைத் தார். இந்திய சமுதாயத்தில் ஒன்றரை நூற் றாண்டுக்கு முன்பு மக்களின் வாழ்க்கை நிலை, பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் அதிகாரத்தை கைப் பற்றியதை விளக்கினார். மொகலாயர்களை அவர்களது தளபதிகள் வீழ்த்தினர். மொகலாய தளபதிகளை மராட்டியர்கள் வீழ்த்தினர். இவர் கள் அனைவரையும் பிரிட்டீஷார் வீழ்த்தினர். இந் தியாவின் பழைய சமூக வாழ் நிலையை பிரிட் டீஷ் அழித்தொழித்தது, ஆனால் அந்த இடத்தில் புதிய வாழ்வை ஏற்படுத்தவில்லை. மக்கள் பட் டினியில், துயரத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த னர். இந்தியாவை அடிமைப்படுத்தி இருக்கும் இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலம் ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி அதிகாரத்திற்கு வரு வதன் மூலம் இந்தியா விடுவிக்கப்படலாம் அல் லது இந்தியர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டீஷாரை வெளியேற்றி விடுதலை பெறுவார்கள் என்று நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஏறத்தாழ 95 ஆண்டு களுக்கு முன்பே மார்க்ஸ் தொலைநோக்குடன் கணித்துக் கூறியதையும், மார்க்ஸின் கவித்துவ மான, அர்த்தச் செறிவான எழுத்து நடையையும் எடுத்துக் கூறிய ரங்கராஜ், அனைவரும் அவரை மறுபடி, மறுபடி ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக அவினாசிகவுண்டம்பாளையம் கிளைச் செயலாளர் கதிர்வேல் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற உறுப் பினர் கே.மாரப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, ஏ.வி.பி. லே அவுட்கே.ராக்கி முத்து உள்பட கட்சி அணியினர் கலந்து கொண் டனர். முடிவில் ஏ.எஸ்.எம். கிளைச் செயலா ளர் எஸ்.ராஜேஷ் நன்றி கூறினார். சிறு நிகழ்வாக நடத்தப்பட்டாலும் அப்பகுதி மக்களின் சீரிய கவனத்தை ஈர்த்ததாகவும், கட்சி அணியினருக்கு நம்பிக்கை ஊட்டி சிந்தனை யைத் தூண்டக்கூடியதாகவும் தாக்கம் செலுத் தியது இக்கருத்தரங்கம். இது போல் பல்வேறு பகுதிகளிலும் மார்க்ஸின் சிந்தனைகளை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று இந்நிகழ்வில் பங்கேற்றோர் உற்சாகத்துடன் தங் கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மார்க் ஸின் தேவை ஒவ்வொருநாளும் மென்மேலும் அதிகமானவர்களால் உணரப்பட்டுக் கொண்டி ருக்கிறது. (நா.நி)