districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மண்சரிவு: மலை ரயில் சேவை மீண்டும் ரத்து

மேட்டுப்பாளையம், நவ.22- மேட்டுப்பாளையம் - ஹில்குரோவ் இடையே ரயில் பாதையில் மண்சரிவு ஏற் பட்டதால், மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினந்தோறும் மலை ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரயிலில் பய ணம் செய்தால் வழியில் இருக்கும் குகைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பச் சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டுகளிக்க முடியும். எனவே, தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடு களை சேர்ந்தவர்களும் மேட்டுப்பாளையம் -  உதகை ரயிலில் பயணம் செல்ல அதிகம் விரும்புவர். இதனிடையே கோவை, நீலகிரி  மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், சாலையோர மரங்கள் முறிந்து விழுவது போன்ற விபத்து கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும், மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் பாதையில் கடந்த ஒரு மாதத் தில் மட்டும் 2 முறை மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் மலை ரயில் போக்குவரத்து ஏற்கனவே 2 முறை ரத்து செய்யப்பட்டன. இதன்பின் சீர மைப்பு பணிகள் முடிந்து, கடந்த ஞாயிறன்று மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில், மேட்டுப்பாளையம், உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரு கிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம் -  ஹில்குரோவ் இடையே 3 பகுதிகளில் தண்ட வாள பாதையில் பாறைகள் உருண்டு விழுந் தன. மேலும், மண்சரிவு ஏற்பட்டு தண்டவா ளத்தை மண் மூடியது. பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் ஜல்லிக்கற் கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. எனவே தண்டவாளப்பாதைகள் அந்தரத் தில் தொங்கின. இதற்கிடையே மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புதனன்று காலை  7:10 மணிக்கு புறப்பட்டது. அப்போது ஹில்கு ரோவ் அருகே 3 இடங்களில் தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து மலை ரயில் கல்லாறு பகு தியில் நிறுத்தப்பட்டது. இதன்பின் அந்த ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்தை வந்தடைந் தது. தொடர்ந்து மலை ரயிலில் பயணிப்ப தற்காக பயணச்சீட்டு எடுத்திருந்த சுற்றுலா பயணிகளிடம் கட்டணத்தொகை திருப்பி தரப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மண்சரிவு பற்றிய தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ  இடத்துக்கு விரைந்து சென்று,  சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடிப்பு போராட்டம்

உதகை, நவ.22- அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியு றுத்தி உதகையில் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி, 1 ஆவது வார்டுக் குட்பட்ட குளிச்சோலை பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுக ளாக இப்பகுதிக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள் ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதி களையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என்றும், அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் கூறினால், அலட்சியமான பதில்களையே அவர்கள் கூறுவ தாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்பகு திக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பணிக்குச் செல்வோர், முதியவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், குளிச்சோலை பகுதியில் சாலையை சீரமைத்துத் தர வேண் டும். பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வலியு றுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த புதுமந்து காவல் துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். மேலும், அங்கு வந்த நக ராட்சி அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குரங்குகளை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

ஈரோடு, நவ.22- ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலம் அருகே பெரியூர் கிராமம் உள்ளது. இப்பகுதி யில் கடந்த சில நாட்களாக 2 குரங்குகள் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன. அங் குள்ள அரசுப்பள்ளி வகுப்ப றைக்குள் புகுந்த 2 குரங்கு களால், மாணவர்கள் அலறி யடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதேபோல் பெரி யூர் பகுதியில் உள்ள வீதிக ளில் குரங்குகள் நடமாடி வரு கின்றன. சில சமயம் குரங்கு அவர்களை கடிக்க பாய்கி றது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சத்து டன் உள்ளனர். குழந்தைகள் ஏதாவது கடையில் பொருட் களை வாங்க சென்றால் அதனை அந்த 2 குரங்கு கள் பறித்து கொண்டு ஓடி விடுகிறது. மேலும், வீடுக ளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை சாப்பிட்டு வரு கின்றன. எனவே, பொதுமக் களை அச்சுறுத்தி வரும் குரங் குகளை கூண்டு வைத்து  பிடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகளவிலான நூல்கள் சேலத்தில் விற்பனை

சேலம், நவ.22- சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவி லான நூல்கள் சேலத்தில் விற்பனையாவது என்பது பெருமைக்குரியது என சேலம் புத்த கத் திருவிழாவை துவக்கி வைத்த அமைச் சர் கே.என்.நேரு பெருமிதம் தெரிவித்தார். சேலம், புதிய பேருந்து நிலையம் அரு கில் உள்ள மாநகராட்சித் திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்ப னையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை செவ்வா யன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், சுமார் ஒரு லட்சம் புத்தகங் களுக்கு மேல் பல்வேறு சிறைச்சாலைகள் மற்றும் நூலகங்களுக்கு பரிசுகளாக வழங் கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு அடுத்து அதிகளவிலான நூல்கள் சேலத்தில் விற்பனையாகிறது என்பது பெருமைக்குரி யது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வருகைபுரிந்து இம்மாபெரும் புத்தகத் திரு விழாவினைப் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மருத்துவத்திற்கு தமிழ்நாடு முக்கியத்துவம் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேச்சு

உதகை, நவ.22- தமிழ்நாடு அரசு மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்து வம் அளித்து வருகிறதென சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கொலக் கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட  காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும்  அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலை வில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு செல்ல  வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகளும் ஏற்பட்டு  வந்தன. இதனைத்தொடர்ந்து தன்னார்வலர்கள் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இன்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்தனர். மேலும், சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட் டன. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவம னையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் இந்த மருத்து வமனையால் பயனடைவார்கள். இதனை கட்டிக்கொடுத்த தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறைக்கு அதி களவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

திருப்பூரில் முத்தமிழ்த் தேருக்கு வரவேற்பு

திருப்பூர், நவ. 22 - தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு  விழாவை முன்னிட்டு அவரது பணிகளை இளைய தலைமு றையினருக்கு எடுத்துக் காட்டுவதற்காக முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டது. எழுத்தாளர் கலைஞர்  குழுவின் சார்பில், இந்த வாகனம் தயார் செய்யப்பட்டு தமிழ கம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. புத னன்று திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த  முத்தமிழ்த் தேரை தமிழ் வளர்ச்சி, செய்தி துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார்,  சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்று, முத்தமிழ்  தேரில் உள்ள கலைஞரின் உருவச்சிலைக்கு மாலை அணி வித்தனர். அதைத் தொடர்ந்து முத்தமிழ்த் தேரைப் பார்வை யிட வந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர்கள்  பேனாவை நினைவுப்பரிசாக வழங்கினர்.

நாட்டின நாய்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

உடுமலை, நவ.22- உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், நாட்டின நாய்கள் பாது காப்பு விழிப்புணர்வு முகாம்  செவ்வாயன்று பெத்தப்பம்பட்டி  கால்நடை சிகிச்சை வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பா.குமாரவேல், நாட்டு நாய்கள் பாது காப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் காணொளி படம்  அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டு, நாட்டின நாய்களை  பாதுகாப்பதன் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார். திருநெல் வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையத்தின் பேராசிரியர் த.ரவிமுருகன்  சிறப்புரையாற்றி னார். எஸ்.அம்மாபட்டி மற்றும் பிஎன் சாளையூர் கிராமத்தில்  உள்ள நாட்டின நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் மு.குமார், ந.சாந்த குமார் ஆகியோர் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து  கொண்டனர். இந்நிகழ்வில் உடுமலைப்பேட்டை மற்றும்  அதன் சுற்று வட்டாரங்களில் கொண்டு வரப்பட்ட 70க்கும்  மேற்பட்ட நாட்டின நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப் பூசிகள் போடப்பட்டது.

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என நிர்மலா சீதாராமன் பேசக் கூடாது!

அமைச்சர் பி.கே. சேகர் பாபு கண்டிப்பு

சென்னை, நவ. 22 - “தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத் திருடி வரு கிறார்கள். கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத்  தெரியவில்லை” என ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங் கானா மாநிலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார் இதற்கு தமிழ்நாடு இந்துசமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக கேட்கவும், அதற்கு பதில் அளிக்கவும் தமிழ்நாடு அறநிலையத்துறை தயாராக உள்ளது. இந்து சமய அறநிலை யத்துறைக்கு அதிக மானியம் வழங்கிய ஆட்சி என்றால், அது தற்போதைய திமுக  ஆட்சிதான் என்பதை அந்த உயர் பொறுப்பில் இருக்கும் அம்மையார் தெரிந்து கொள்ள வேண்டும்.  5 ஆயிரம் திருக்கோவில்களில் திருப்பணிக்காக 100 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 290, புதுக்கோட்டை 270, கன்னியாகுமரி 400 மேற்பட்ட தேவஸ்தானங்களுக்கு அரசு  மானியம் வழங்கப்பட்டு வருகின்றன.  8001 திருக்கோயில்களுக்கு மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பெல்லாம் 1000 கோயில்களுக்குத்தான் கிடைக்கும். தெய்வங்களையும் தெய்வத்திற்கு சொந்தமான இடங்களையும் பாதுகாத்து, திருப்பணிகளை வழங்கிய ஆட்சி இது. மாறாக, இறைச் சொத்தை களவாடும் ஆட்சி இது இல்லை, பாதுகாக்கும் ஆட்சி. திமுக ஆட்சி ஏற்பட்ட பின் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக் கள் மீட்கப்பட்டுள்ளன. 200 உலோக சிலை கள், 100 கற்சிலைகள் என மொத்தம் 400 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்க, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது சரி அல்ல. உயர் பொறுப்பில் இருப்ப வர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூ பித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு பி.கே. சேகர் பாபு  குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பரில்  குரூப் 2 தேர்வு  முடிவுகள்

சென்னை, நவ. 22 - குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. நகராட்சி ஆணையர், துணைப்பதிவாளர், இள நிலை வேலைவாய்ப்பு அலு வலர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவு களில் உள்ள சிறப்பு நிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி யாக உள்ள 5,446 பணியி டங்களை நிரப்ப குரூப் 2  மற்றும் குரூப் 2ஏ பணிகளுக் கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 அன்று நடைபெற்றது.  இந்த தேர்வை 51 ஆயி ரத்திற்கும் அதிகமானவர் எழுதியிருந்தனர். இந்த நிலையில் முடிவுகள் டிசம்ப ரில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளது.

வணிக வாய்ப்புகளை கண்டறியும் திட்டங்களில் கவனம் செலுத்த அரசுக்கு சைமா கோரிக்கை

திருப்பூர், நவ. 22 – நம் நாட்டு ஜவுளித் தொழிலில் உற்பத்தி பெருக்கத்தில் கவனம் செலுத்துவதுடன், புதிய வணிக வாய்ப்புகளைக் கண்டறியும் திட்டங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் கவ னம் செலுத்த வேண்டும் என்று தென்னிந்திய  பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறியுள் ளார். இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று  விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: நம் நாட்டில் கைத்தறி, விசைத் தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகளை உள்ளடக்கிய ஜவுளித் தொழில் கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து பின்னடைவைச் சந்தித்து வரு கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் பல சலுகைகள்  அறிவித்து ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற நினைத்தாலும், நமக்குப் போட்டியாக உள்ள  பிற நாடுகளில் அந்தந்த அரசுகள் உற்பத்தி  உயர்வை மட்டும் கணக்கிடாமல், உள்நாட்டி லும், வெளிநாடுகளிலும் உடனுக்குடன் தீர்வ தற்கு வழிவகைகள் செய்கின்றன. எனவே உற்பத்தி பெருக்கத்தில் கவனம் செலுத்தி வந்த நாம் உற்பத்தியான பொருட்களை உட னுக்குடன் உள்நாட்டிலும், வெளிநாடுக ளிலும் நுகர்வோருக்கு கொண்டு போய் சேர்ப் பதில் புதுமையான வழிவகைகளைக் கண் டெடுக்கத் தவறிவிட்டோமோ எனத் தோன்று கிறது. பிற போட்டி நாடுகளின் திட்டங்களைக்  கூர்ந்து ஆராய்ந்து உற்பத்திப் பெருக்கத்தை  முன்னிலைப்படுத்தும் அதே நேரத்தில் அவற்றை விற்பனையாகுமாறு வணிக நிறுவ னங்களை ஊக்கப்படுத்தும் புதிய வணிக வாய்ப்புகளைக் கண்டறியும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று  சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறியுள் ளார்.

கள்ளக்கிணறு நால்வர் படுகொலை வழக்கு:  குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர், நவ. 22 - பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத் தில் நடந்த நால்வர் படுகொலை சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகள் திருப்பூர் மாவட்ட  குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட் டனர். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர்  6ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். திருப்்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள் ளக்கிணறு கிராமத்தில் வசித்து வந்த செந்தில் குமார், மோகன்ராஜ், ரத்தினம்மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தமது வீட்டின் அருகே  மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற் காக கோரமான முறையில் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் போலீசார் துரிதமாக செயல்பட்டு செல்லமுத்து, ஐயப்பன், குட்டி  என்கின்ற வெங்கடேஷ், சோனை முத்தையா  மற்றும் செல்வம் ஆகிய ஐந்து பேரை கைது  செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில்  அடைத்தனர். இதில் விசாரணையின் போது  தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்க டேசை, போலீசார் கால் முட்டியில் சுட்டுப் பிடித்தனர். குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவை  அரசு மருத்துவமனையில் போலீஸ்  பாதுகாப்போடு சிகிச்சை பெற்று வரு கிறார்.  இந்த வழக்கில் காவல்துறையினர் 800  பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் புத னன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் கள்ளக்கிணறு கொலை குற்ற வாளிகள் ஐந்து பேரையும் காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன், குற்றவாளிகள் ஐந்து பேரையும் அடுத்த மாதம் 6ஆம் தேதி ஆஜர்ப்படுத்த உத்தர விட்டார்.

காட்டெருமை தாக்கி முதியவர் பலி

கோவை, நவ.22- வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி முதியவர் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக ரித்து வருகிறது. அதிலும் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை ஆகியை அடிக்கடி வனத்தில் இருந்து வெளி யேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சு றுத்தி வருகின்றன. இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள  ரயான் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (65) என்ப வர், பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப் போது தேயிலைத் தோட்டத்துக்குள் இருந்த காட்டெருமை, அவரை ஆவேசத்துடன் தாக்கிது. இதில் படுகாயமடைந்த செல்லப்பன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை போலீசார் மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன்பின் செல்லப்பன் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனவிலங்குகளிடம் இருந்து  பாதுகாப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு, நவ.22- பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இத னிடையே, நீர்பிடிப்பு பகுதி யான நீலகிரி மலைப்பகுதி யில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவ தால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள் ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வந்தது. தொடர்ந்து நீர்வரத்தைவிட பாசனத்திற்கு அதிக அள வில் தண்ணீர் திறந்து விடப் பட்டு வருவதால், அணை யின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில், பவா னிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால், புதனன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது. அதன்படி, புத னன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 74.51 அடியாக உள் ளது. அணைக்கு விநாடிக்கு  4 ஆயிரத்து 428 கன அடி யாக நீர்வரத்து அதிகரித்துள் ளது.