மக்கள் சாலை மறியல் தருமபுரி, பிப்.20- பாலக்கோட்டில் உள்ள கோவில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலில் ஈடுபட்ட கோவில் நற் பணி மன்றத்தினரை கண்டித்து 12 கிராம மக்கள் பாலக்கோடு தக்காளி மார்கெட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோட்டிலுள்ள ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு வரு டமும் மாசி மாதம் பெளர்ணமியை யொட்டி ஒருவாரம் நடைபெறுவது வழக்கம். காலங்காலமாக இக்கோ விலுக்கு சொந்தமான பனங்காடு, சித்திரப்பட்டி, வாழைத்தோட்டம், குப் பன் கொட்டாய், ரெட்டியூர், காவாப் பட்டி, செங்கோடப்பட்டி, தொட்டம் பட்டி, உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த ஊர் தலைவர்கள் மற்றும் கோவில் விழாக்குழுவினர் திரு விழாவை நடத்தி வந்தனர். ஆனால், இடையில் ஸ்ரீபுதூர் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றம் என்ற பெய ரில் ஒரு சிலர் கோவில் திருவிழா விற்கு நன்கொடை என்ற பெயரில் தொழிலதிபர்கள், கடை உரிமையா ளர்கள், நடைபாதை வியபாரிகள் என அனைவரிடமும் மிரட்டி பணம் வசூல் செய்து வருகின்றனர். இதனால் கோவில் பெயருக்கு களங்கம் ஏற் பட்டு வருகிறது. எனவே, கோவில் வளாகத்தில் காலம் காலமாக நடை பெற்று வந்த நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க கோரியும், கோவி லுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நற் பணி மன்றத்தின்ர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் 12 கிராம மக்கள் பாலக்கோடு தக்காளி மார்கெட் பகு தியில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து, இதுகுறித்து விசாரித்து உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென் றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் தருமபுரி - ஓசூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.