districts

img

கட்டாய இந்தி திணிப்பு: ஒன்றிய அரசுக்கு எதிராக ஆவேசம்

கோவை, அக்.27- தாய்மொழியின் மீது அடக்குமுறை யாக இந்தியை திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியா ழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து வியாழனன்று தமிழக முழு வதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக கோவை பிஎஸ் என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலி பர் சங்க மாவட்ட தலைவர் விவேகா னந்தன் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் சிறப்புரையாற்றினார். இதில், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசாருதீன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, மற்றும் நிர்வாகிகள் கயல்விழி, மணி பாரதி  உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று ஒன் றிய அரசிற்கெதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நாமக்கல்

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாணவர் சங்க மாவட்ட தலைவர் மு.தங்கராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் தே.சர வணன், வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் எம்.மணிகண்டன், மாவட்ட பொரு ளாளர் கே.சிவசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாண வர் சங்க ஒன்றிய செயலாளர் கோகுல்  நன்றி கூறினார். எருமப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வாலிபர் சங்க வி.பிரபு தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கே.சிவசந்திரன், மாண வர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். சரவணன், விவசாய சங்க மாவட்ட  உதவிச்செயலாளர் மு.து.செல்வராஜ்  உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வாலிபர் சங்க  மாவட்ட செயலா ளர் எம்.அருள்குமார் தலைமை வகித் தார். இதில், மாவட்ட தலைவர் சபரி ராஜன், மாவட்ட பொருளாளர் சிலம்பர சன், நகரத் தலைவர் மணிகண்டன், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர். 

சேலம்

சேலம் ஜங்ஷன் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலை வர் வி.ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் வி.பெரியசாமி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பவித் ரன், மாவட்ட தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ஈரோடு

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி 4 ரோட் டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகர செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். இதில், வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன்,  மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பிரவீன், மாவட்ட செய லாளர் ரஞ்சித்குமார், மாவட்ட பொருளா ளர் எம்.லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.