சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
உதகை, செப்.18- உதகையில், பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட் டார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிறுமியின் தந்தையும், பொக்லைன் வாகன ஓட்டுநர் சேகர் (44) ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த 15 ஆம் தேதியன்று சேகர் தன்னுடைய நண்பரைத் தேடி வீட்டுக்கு வந்தார். அப்போது 2 குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பயந்து போன சிறுமி இது குறித்து செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தெரிவித்து உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற் றோர் உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் தனர். இதன்பேரில் காவல் துறையினர் சேகரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை வலுப்படுத்துகிறது: காங்., தேசிய செயலாளர் பேட்டி
திருப்பூர், செப்.18 - பாஜக ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை வலுப்ப டுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக புதிதாகப் பொறுப்பு ஏற்று இருக்கும், அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கோபிநாத் கூறினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாள ராகவும், கர்நாடக மாநிலப் பொறுப்பாளராக பதவியேற்று புதன் கிழமை திருப்பூருக்கு வருகை தந்த கோபிநாத் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கார்ப்பரேட் நிறுவனங்களை வலுப்படுத்தும் அரசாக ஒன்றிய அரசு செயல் படுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் சாமானியர்களுக்கான அமைச்சராக இதுவரை இருந்த தில்லை. சாதி மதம் கடந்த அனைவருக்கும் ஆன கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என்று கோபிநாத் கூறினார்.
தினசரி குடிநீர் விநியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என மாற்றம் தாராபுரம் குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்
திருப்பூர், செப். 18 – தாராபுரம் நகராட்சியில் ஏற்கெனவே தின சரி நடைபெற்று வந்த குடிநீர் விநியோகம் தற் போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று மாற் றப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களிடம் கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டுள் ளது. உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு கண்டு குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாரா புரம் வட்டச் செயலாளர் என்.கனகராஜ் இது தொடர்பாக புதன்கிழமை விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தாராபுரம் நகராட்சி 30 வார்டுகளை கொண்டது. இதில் ஒரு லட்சம் மக்கள் குடியி ருந்து வருகிறார்கள். தாராபுரம் நகருக்கு தாராபுரத்தை ஒட்டி இருக்கும் அமராவதி ஆற் றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. ஏற்கனவே இருந்த நகராட்சி நிர்வா கத்தில் தினசரி குடிநீர் விநியோகம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. தற்சமயம் தாராபுரம் நக ராட்சி பொறியியல் துறை பொறுப்பில் குடிநீர் விநியோகத்தில் எவ்விதமான முன் முயற்சி யும், நடவடிக்கையும், நிர்வாகமும் சரி யில்லை. இதனால் தினசரி விநியோகம் தடைப் பட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகம் செய்யப்படுகிறது பத்திரிகை செய்திகளிலும் இதைத் தெரிவிக்கிறார்கள். எத்தனை நாட்க ளுக்கு இந்நிலை நீடிக்கும் என்ற கேள்வி எழுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை இப்படித்தான் வரு கிறது. ஒரு தடவை கேட்வால்வு பழுது என்று சொன்னார்கள், அடுத்து மோட்டார் பழுது என்றார்கள். அனைத்து பழுதுகளும் எப் போது சரி செய்யப்படும் என்று கேட்டால் பதில் இல்லை. எனவே தினசரி குடிநீர் விநியோ கம் செய்ய தாராபுரம் நகராட்சி பொறியியல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொறியியல் துறை அலுவலரிடம் கேட் டால் “இது என்ன அமெரிக்காவா? தினசரி தண்ணீர் விட!” என்று கேட்கிறார். எங்க ளைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் என்று சொல்கிறார். ஓவர்சீயர் அவருடைய போன் நம்பர் வெளியில் சொன்னால் கடைநிலை ஊழியர் மூலம் அவர்கள் மிரட்டப்படுகி றார்கள். தற்சமயம் டெங்கு காய்ச்சல் பரவி வரு வதால் வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் குடி நீரைத் தேக்கி வைக்கக்கூடாது என்று நக ராட்சி நிர்வாகம் சொல்கிறது. தினசரி தண்ணீர் விட்டால் அதிகப்படி தண்ணீரை சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பிடித்து வைத்த தண்ணீரை கீழே கொட்ட வேண்டும் என்று ஊழியர்கள் நிர்பந்தப்படுத் துகிறார்கள் எனவே மக்கள் மத்தியில் கடும் கோபமும், அதிருப்தியும் உள்ளது. மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு, தாராபுரம் நகராட்சி பொறியியல் துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தினசரி குடிநீர் விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடிநீர் விநியோகத்தை சீர மைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாராபுரம் வட்டக்குழு செயலாளர் என். கனகராஜ் கூறியிருக்கிறார்.
குடிமைப்பணிகள் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு திருப்பூரில் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
திருப்பூர், செப். 18 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந் துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் குடிமைப்பணிகள் 2, 2ஏ முதன்மைத் தேர் வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தார். கடந்த 2023ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்புகளின் வாயிலாக டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர் வில் 12 மாணவர்களும், தொகுதி 2 மற்றும் 2ஏ தேர்வில் 11 மாண வர்களும் தேர்ச்சி பெற்று அரசுப் பணிவாய்ப்பு பெற்றனர். தற்போது குடிமைப் பணிகள் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர் வுக்கு தயாராகும் பட்டதாரி மாணவர்கள் இந்த இலவசப் பயிற் சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421- 2999152, 9499055944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். கடந்த ஏப். 6 அன்று நடைபெற்ற தேர்தல் விழிப் புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் வழங்கினார்.
திருப்பூரில் இன்று மின்தடை
திருப்பூர், செப்.18- திருப்பூர் மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடை பெற உள்ளதால், இன்று(செப்.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மின்தடைபடும் பகுதிகள்: அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, ஓடக் காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவு சிங் யூனிட், முத்துச்சாமி வீதி பிரிவு, கே.ஆர்.இ. லேஅவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், எஸ்.ஏ.பி.தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், ஆசர் நகர், பூத்தார் தியேட்டர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதி புரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை மற்றும் சிக்காரவேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலாது நபி விடுமுறை தினத்தில் 1244 மதுபான பாட்டில்கள் கடத்தல்
திருப்பூர், செப்.18 - மிலாது நபி அரசு விடுமுறை தினத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், சட்ட விரோதமாக மது பான விற்பனையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என எச்சரிதிருந்தபோதும், மங்கலம் சாலையில் முறைகே டாக 1244 மதுபான பாட்டில்களை எடுத்து சென்ற நபர்களை காவலர்கள் செவ்வாயன்று கைது செய்தனர். திருப்பூர் மாநகர போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட் டுப்படுத்த காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் காவலர்கள் செவ்வாயன்று மங்கலம் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது இடுவம்பாளையம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மது விலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு (26), மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாபு (55) இருவரும் வஞ்சிபாளையம் ரத்தினபுரி கார்டன் அருகே உள்ள மதுபான கடையில் இருந்து, மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து இடுவம்பாளையம் பகு திக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இத னைத் தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த 24 பெட்டிக ளில் 1152 மதுபான பாட்டில்கள் மற்றும் 8 பெட்டிகளில் இருந்த 92 பீர் பாட்டில்கள் என மொத்தம் 1244 மதுபான பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், முறைகேடக மதுபான பாட்டில்களை கொண்டு சென்ற சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்து, கருப்பு மற்றும் பாபுவை கைது செய்தனர்.
திருப்பூரில் அதிகமாக பரவி வரும் காய்ச்சல் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் கூட்டம்
திருப்பூர், செப். 18 - திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிக ளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரிடமும் காய்ச்சல் அதிக ளவில் பரவி வருகிறது. அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளி லும், கிளினிக்குகளிலும் கூட்டம் நிரம்பி வழி கிறது. திருப்பூரில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. ஒரு வார காலத்திற்கும் மேலாக நீடித்த காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி களுடன், உடல் வலியும் ஏற்பட்டு பலர் அவ திப்படுகின்றனர். பரவலாக காய்ச்சல் அதிக ளவில் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தனி யார் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப் படுத்துகின்றனர். அரசு மருத்துவமனை, நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழக் கத்தை விட அதிகளவிலான கூட்டம் நிரம்பி வழிகிறது. வழக்கமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து சாப்பிட்டால் ஓரிரு நாட்க ளில் காய்ச்சல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆனால் சமீப நாட்களில் வரக் கூடிய காய்ச்சல் தொடர்ச்சியாக அதிக நாட் கள் நீடிப்பதுடன், காய்ச்சல் வெப்ப நிலையும் 100 டிகிரிக்கு மேல் அதிகளவிலேயே தொடர் வதால் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்ப டுத்தி வருகிறது. அதுவும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே சாதாரண காய்ச்சல் என்று மக்கள் அலட்சியமாக இருக் கக்கூடாது. மருத்துவர்களை அணுகி உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமோ, பொது சுகாதாரத் துறையோ, மாநகராட்சி மருத்துவ அலுவலரோ இது குறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பும் செய்யா தது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பொது நல அமைப்பினர் கூறுகின்றனர். எனவே தற்போது திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவி வரும் காய்ச்சல் குறித்தும், பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவ டிக்கைகள், சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்துவது ஆகியவை பற்றி, மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத் துறையும் உரிய தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும் குடி நீரை சுத்திகரித்து விநியோகம் செய்வது, கொசு மருந்து தெளிப்பது, சாக்கடை கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொது நல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
குழந்தைக்கு பிறவி இருதயக் கோளாறு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை
கோவை, செப்.18- பிறந்த குழந்தைக்கு பிறவி இருதயக் கோளாறு இருப்பதைஅறிந்து விரைந்து வெற்றிகரமாக அறுவை சிசிச்சை மேற்கொண்ட கோவை மருத்து வர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருச்சியில் பிறந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதை சில தினங்களுக்கு முன்பு கண்டறிந்துள்ளனர். ஆனால், திருச்சி அரசு மருத்துவமனை யில் அந்த சிகிச்சை வசதி இல்லாத காரணத்தினால் அந்த குழந்தைக்கு கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவம னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதியன்று திருச்சி யில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையின் பசுமை வழித்தட ஒத்துழைப்புடன் அக்குழந் தையை கோவை மாவட்டம், ராமகிருஷ்ணா மருத்துவம னைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அக்குழந்தைக்கு எம்மா திரியான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து, 5 ஆம் தேதியன்று திறந்த இதய அறுவை சிகிச்சையை (Open Heart Surgery) வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். தற்போது அந்த குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், அந்த குழந்தைக்கு பிறவி இருதயக் கோளாறு இருந்துள்ளது.திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டறிந்த உடனே உரிய நேரத்தில் இங்கு அக்குழந்தையை அனுப்பி வைத்ததால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது. நூற்றில் ஒரு குழந்தைக்கு இந்த பிறவி இருதயக் கோளாறு வருவதாகவும், மரபணு குறைபாட்டால் இது வர வாய்ப்புள் ளதாக தெரிவித்தனர். இந்த குழந்தைக்கு இருதய செயல்பாடுகள் இயல்பாக இருக்கும் பிற குழந்தைகளை போலவே இயல்பான வாழ்க் கையை இந்த குழந்தையும் வாழும். இந்த அறுவை சிகிச் சைக்கு இன்சூரன்ஸ் இல்லை. ஆனால், நல்ல உள்ளங்கள் அதிகமானோர் பணத்தை கொடுத்து உதவியதாக தெரிவித்த னர்.தொடர்ந்து இது குறித்து பேசிய குழந்தையின் பெற்றோர், தங்கள் குழந்தை குணமடையும் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை. நல்ல முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. ஓட்டுநருக்கும், மருத்துவர்களுக்கும், ராமகி ருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்கலங்கிய படி நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
நிபா வைரஸ் நீலகிரியில் தீவிர கண்காணிப்பு
உதகை, செப்.18- மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பை கண்டறி யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி எல்லையில் சுகாதார துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நிபா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட் டுள்ளது. இதை தொடர்ந்து கேரளா அரசு காட்டு முண்டா என்ற இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து யாரும் வெளியே செல்லாதவாறு தனிமை படுத்தப்பட்டுள்ளது. அதே போல் பொதுமக்கள் யாரும் முக கவசம் இல்லாமல் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ளதால் எல்லைகளில் சுகாதார துறையினர் தீவிர புதனன்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தாளூர், சேரம்பாடி நாடுகாணி, பாட்டவயல். நம்பியார் குன்னு ஆகிய 5 சோதனை சாவடிகளில் சுகாதார ஆய்வாளர் உட்பட தலா மூன்று பேர் பேருந்து, கார், வேன் உட்பட வாகனங்களில் வரும் பயணிகளை சோதனை செய்து காய்ச்சல் இருக்கி றதா? என்று பார்க்கின்றனர். அதேப்போல் காய்ச்சல் இருந் தால் உடனடியாக தனிமை படுத்தவும் முடிவு செய்துள்ள னர்.
ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்,செப். 18- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, செவ்வாயன்று நடந்த பருத்தி ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள்,469 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.ஹெச்., ரகம் குவிண்டால், 7,689 ரூபாய் முதல், 8,629 ரூபாய், கொட்டு மட்ட ரகம், 4,999 ரூபாய் முதல், 6,099 ரூபாய் என, மொத்தம், 12 லட்சம் ரூபாய்க்குபருத்தி வர்த்தகம் நடந்துள்ளது.
கத்திரி வெயில் தாக்கத்தால் மக்கள் அவதி
ஈரோடு, செப். 18- செப்டம்பர் மாதத்தில் கத்திரி வெயில் தாக்கத்தால் ஈரோட் டில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பது இயல்பு. கத்திரி வெயில் சுட்டெ ரிக்கும். வெப்பநிலை உச்சத்தை அடையும். கடந்த கோடை யில் ஈரோட்டில் 109 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. இந்தியாவில் அதிகமாக வெயில் பதிவான நகரங்களில் ஈரோடு மாவட்டம் இடம் பிடித்தது. ஆனால் செப்டம்பரில் வெப்பநிலை 100 டிகிரியைக் கடந்துள்ளது என்பது வரலாறு காணாதது. எப்பொழுது எவ்வளவு மழை பொழிவு இருக்கும் என்று துல்லியமாக அறிய முடியாததைப் போல வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், உணவு விநியோகிக்கும் பணியில் இருப்போர், கட்டுமானத் தொழிலாளர்கள். வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக 12 மணியிலி ருந்து 3 மணி வரை வண்டி ஓட்ட முடியவில்லை. இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறையில் கேட்ட போது, பருவநிலை மாற்றங்கள் திடீர் திடீர் என மாறும். உலக ளவில் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் இங்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு நம் மாவட்டத் தில் மழை பொழிந்துள்ளது. 28ஆம் தேதிக்கு மேல் மழையை எதிர்பார்க்கிறோம் என்று தாசில்தார் அங்கமுத்து தெரிவித் தார்.
விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி
சேலம், செப். 18- சேலம், கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தனியார் டிராவல்ஸ் மற்றும் பயணியர் ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பரிதாப மாக உயிரிழந்தார். சேலம் கருப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட- கரும்பாலை மேம்பாலத் தில் புதனன்று காலை பெங்களூரில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி அதே வழியில் வந்த பயனியர் ஆட்டோ மீது மோதி விபத்து ஏறபட்டது. இதில், ஆட்டோ பாலத்தின் இறக்கத்தில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். உள்நோயாளி யாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.