districts

img

தூய்மை பணியாளர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம்

தருமபுரி, பிப்.5- தருமபுரி, பொ.மல்லாமபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர் களை கட்டுமான பணிக்கு பயன் படுத்திய பேரூராட்சி நிர்வாகத் திற்கு கண்டனங்கள் எழுந்துள் ளன. தூய்மை பணியாளர்களை கொத்தடிமைகள் போலவும், மனி தாபிமானமற்ற முறையில் மிகவும் கீழ்த்தரமாகவும், சக மனிதனை மதிக்காமலும் தூய்மை பணியா ளர்களை நடத்தும் அவலங்கள் தருமபுரி மாவட்டத்தில் தினந்தோ றும் அரங்கேறி வருகிறது. இந்நி லையில், பொ.மல்லாபுரம் பேரூ ராட்சியில் 40க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, தூய்மை பணிக்கு பயன்படுத்தா மல் லாரிகள் மூலம் செங்கற்களை ஏற்றி வந்து பேருந்து நிலையத் தில் சுற்றுச்சுவர் இல்லாத பகுதி களுக்கு செங்கல் சுவர் ஐந்து அடி உயரத்திற்கு, 30 அடி நீளத்திற்கு கட்டுமான பணிக்கு பயன்படுத்தி யுள்ளனர். செங்கல் எடுத்து அடுக் குவது, கலவை கலக்கி கொடுப் பது, எம்சாண்ட் அள்ளி கொட்டு வது போன்ற பணிகளுக்கு பேரூ ராட்சியுள்ள தூய்மை பணியாளர் களையும் அழைத்து வரப்பட்டுள் ளனர்.

அங்கு அவர்களை கொத்த னார், மேஸ்திரி, கலவை கலக்கும் சித்தாள் போல வேலை வாங்கியது அப்பகுதியில் சென்ற பொது மக்க ளையும், சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஒரு கட்டுமான பணி நடை பெறுவதற்கு முறையாக ஒப்புதல் பெற்று ஒரு பொறியாளர் மூலமா கவோ? மேஸ்திரி மூலமாக டெண் டர் விட்டு அவர்கள் மூலமாக வேலையை செய்ய வைக்கலாம். ஆனால், தூய்மை பணியாளர் களை பேரூராட்சி நிர்வாகம் தனது விருப்பத்திற்கேற்ப அனைத்து வேலைகளுக்கும் விதிகளை மீறி  பயன்படுத்துவது பெரும் கண்டனத் துக்குரியது என பொதுமக்கள் கூறு கின்றனர். தூய்மை பணியாளர் கள் வயிற்றுப் பிழைப்புக்காக  காலை 5 மணிக்கு எழுந்து ஊர்  முழுவதையும் தூய்மைப்படுத்து வதில் எடுக்கும் சிரமத்தை விட  பேரூராட்சி நிர்வாகம் தனது  வேலையை எடுத்து விடுவார்களோ? என்று பயந்து அவர்கள் சொல்லும் செயலுக்கு எல்லாம் தலையாட்டி பொம்மை போல பயந்து ஒடுங்கி  வேலை செய்வதும், உரிமைகளை கேட்டால் அவர்களை பணி நீக்கம் செய்வதும் அன்றாட செயலாக பேரூராட்சி நிர்வாகம் செய்து வரு கிறது. எனவே, துப்புரவு பணியாளர் களை தேவையில்லாத வேலை யில் திணிக்காமல், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.