தருமபுரி, அக்.25- மழையால் சேதமடைந்த மலையூர் - மேட்டுக்கொட்டாய் சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றி யம், பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலையூர் கிராமத்திலிருந்து வாரக்கொல்லை வழியாக மேட்டுக்கொட்டாய் வரை 6 கி.மீ தூரம் கொண்ட மண் சாலை செல்கிறது. இச்சா லையை அக்கிராம மக்கள் இருசக்கர வாக னம் மற்றும் சரக்கு வாகன போக்குவரத் துக்கு பயன்படுத்தி வந்தனர். அண்மையில் பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சில இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் இச்சாலையைப் பயன்படுத்த முடி யாமல் மலையூர், வாரக்கொல்லை கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக சேதமடைந்த மண் சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், இச் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண் டும் என வலியுறுத்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதனிடம் மலை யூர், வாரக்கொல்லை கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், பகுதிக்குழு உறுப்பினர் சின்னராஜி உட்பட பலர் உடனி ருந்தனர்.