districts

img

பணி நிரந்தரம் செய்க ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை, செப்.15- பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆஷா திட்டப்  பணியாளர்கள் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆஷா ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளியன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு மாநில பொதுச் செய லாளர் சீதாலட்சுமி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் கேசினி ரோஜா முன் னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆஷா ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக ஊதியமாக ரூ.26 ஆயிரம்  வழங்க வேண்டும். மாதந்தோறும் ஊதி யத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க வேண்டும்.  10 ஆண்டுகள் பணி முடித்த ஆஷா ஊழி யர்களுக்கு கிராம சுகாதார செவிலியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். 2 மணி நேர  வேலை என்று அறிவித்து விட்டு 24 மணி  நேர வேலை வாங்குவதை நிறுத்த வேண்டும்.  ஈபிஎப்., ஈஎஸ்ஐ., போன்ற சமூக பாதுகாப்பு  திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்டது. இதில் சிஐடியு நீலகிரி மாவட்டத் தலைவர்  சங்கரலிங்கம், பொருளாளர் நவீன் சந்திரன்,  ஆஷா பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜீவரேகா,  பொருளாளர் இந்துமதி,  இணைச் செயலாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.