கோவை, ஜூலை 20- கோயம்புத்தூர் பத்திரிகையா ளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து நடத் திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்க ளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் கோவை நவ இந்தியா பகு தியில் உள்ள ஹிந்துஸ்தான் மருத் துவமனை வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து, பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்து கேட்ட றிந்தார். ஹிந்துஸ்தான் மருத்துவ மனை மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் பிரபு ஆகியோர் மருத் துவ பரிசோதனைகள் குறித்து விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, “உடல்நலத்தை கண்காணிக்கவும், வரும் முன் காப்போம் என்ற அடிப் படையிலும் உடல் ஆரோக்கியத் தைப் பாதுகாக்க இதுபோன்ற முகாம் அவசியமானது. வாழ்வி யல் மாற்றம் காரணமாக வளமான உடல் ஆரோக்கியத்திற்கு யோகா, உடற்பயிற்சி போன்றவைகளை முறையாக தொடர்ந்து செய்ய வேண்டும். செய்தித் துறையில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் கொடுக்க வேண் டிய சூழல் உங்களுக்கு உள்ளது. அதனால் உடல் ஆரோக்கி யத்தைப் பேணிக் காப்பது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த நிலை யில், பணி சூழல் காரணமாக காப் பீடு போன்ற பாதுகாப்பு ஊடகவிய லாளர்களுக்கு அத்தியாவசியமா னது என்றார். நிகழ்ச்சியில் பேசிய ஹிந்துஸ் தான் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் பங்கேற்க வைத்து பயனடையும் வகையில் இந்த முகாமிற்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. மேம்ப டுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட் பக் கருவிகள் மூலம் இலவசமாக இந்த முகாமில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது, என்றார். இரண்டு கட்டங்களாக நடை பெற்ற இந்த மருத்துவ முகாமில், கோவை மாவட்டத்தில் பணியாற் றும் பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இந்நிகழ்வில், மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவ லர் செந்தில் அண்ணா உடனிருந் தார்.