திருப்பூர், பிப்.26- மக்காச்சோளம் விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள் ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி களில் மக்காச்சோளம் சாகுபடி பிர தானமாக உள்ளது. பி.ஏ.பி., இரண் டாம் மண்டல பாசன நிலங்கள், அமரா வதி பாசன நிலங்கள் மற்றும் பருவ மழை திருப்தியாக பெய்ததால் இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங் களில் மக்காச்சோளம் சாகுபடி செய் யப்பட்டது. இப்பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக் காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப் பட்டு தற்போது அறுவடை துவங்கி யுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதி களில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை செய்யும் காலமாகும். இப்பகுதிகளில் விளை யும் மக்காச்சோளத்தை கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன. நடப்பாண்டு உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந் துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் 2,250 முதல் 2340 வரை விற்று வந்தது. மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் வியா பாரிகள் மற்றும் கோழித்தீவன உற் பத்தி நிறுவனங்கள் கடந்த 10 நாட் களாக தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என குறைக்கப்பட்டு, குவிண்டால் 1,150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப் பட்டது. இந்நிலையில், வெளி மாநிலத்தி லிருந்து மக்காச்சோளம் வர வாய்ப் பில்லை. எனவே, உள்ளூர் மக்காச் சோளம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில், திடீர் விலை சரிவு காரணமாக விவசாயிகள் மக்காச் சோளம் அறுவடையை குறைத்து கொண்டதோடு,
அறுவடை செய்ய மக்காச்சோளத்தை விற்பனை செய்யா மல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க துவங்கினர். இதனால் விற்ப னைக்கு மக்காச்சோளம் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குவிண்டா லுக்கு, 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்ததுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறிய தாவது, மக்காச்சோளம் அறுவடை துவங்கி இரண்டு மாதம் வரை நிலை யான விலை காணப்பட்டது. இந்நிலை யில், வியாபாரிகள் சிண்டிகேட் காரண மாக விலை குறைக்கப்பட்டது.மக் காச்சோளத்திற்கு விதை, உரம், மருந்து என 40 ஆயிரம் ரூபாய் வரை செல வாகியுள்ள நிலையில், அறுவடைக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவா கிறது.வழக்கமாக ஏக்கருக்கு 40 குவிண் டால் மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 22 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவ சாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விலையை எதிர் பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரி கள் கூறுகையில், மக்காச்சோளம் விலை குறைவு காரணமாக, விற்ப னைக்கு வரத்து குறைந்தது. இத னால் மீண்டும் விலை உயரத்துவங்கி யுள்ளது என்றனர்.