districts

img

மகாத்மா காந்தி பிறந்தநாள்: மதநல்லிணக்க உறுதி ஏற்பு

தருமபுரி, அக்.2- மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, புதனன்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப் பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தி யின் பிறந்தநாள் புதனன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக, சமூக நல்லி ணக்க மேடையின் சார்பில் தருமபுரி யிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. சமூக நல்லிணக்க மேடை நிர்வாகி எஸ்.கிரைஸாமேரி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, ஒன்றியச் செயலா ளர் என்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன், தமுஎகச மாவட்டச் செயலாளர் சிங்காரவேலு, நிர்வாகி வேலக ணபதி, மாதர் சங்க நிர்வாகிகள் சுபா, கே.சுசிலா, விவசாயிகள் சங்க நிர்வாகி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மதநல்லி ணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோன்று, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில், “மகாகவியும், மகாத்மாவும்” என்ற தலைப்பில் தருமபுரி முத்து இல்லத்தில் கருத்த ரங்கம் நடைபெற்றது. குப்புசாமி தலைமை வகித்தார். சாரா வரவேற் றார். புலவர் இல.சுந்தரம் கருத்து ரையாற்றினார். “காந்தியும், அவ ரின் கைத்தடியும்” என்ற தலைப்பில் கவிஞர் நவகவி கவிதை வசித்தார். இதில் ஆசிரியை ஜலஜா ரமணி, மனோ சிங்காரவேல், வானவில் மன்ற செயற்பட்டாளர் மீரா, பிர பாரகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம்  ஊத்துக்குளி தாலுகா குழுக்கள் சார்பில் மொரட்டுப்பாளையத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. பின்னர், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை , ஜனநாயகம் பாதுகாப்போம்  என்ற உறுதிமொழி ஏற்பு  நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில், மாதர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலா ளர் கே.சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் கே.எ. சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று திருப்பூர் காந்தி நகரில் உள்ள காந்தி அஸ்தி கலசத் திற்கு முன் தேச ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பாலர் பூங்கா சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், ராணி ராமமூர்த்தி, ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் துரை, 15 வேலம்பாளையம் பாலர் பூங்கா பொறுப்பாளர்கள் சாந்தி, விஸ்வநாதன் மற்றும் சாருக்கான் மற்றும் குழந்தைகள் 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.  பெருமாநல்லூரில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதனன்று என்றென்றும் தேசப்பிதா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. பாலர் பூங்கா மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் ரேவந்த் வரவேற்று பேசி னார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, துணைத் தலைவர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் கார்த்திக் ஆகி யோர் வாழ்த்து பேசினார். என்றென் றும் தேசப்பிதா என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் தூயவன் தேசப் பிதா மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார். இதையடுத்து மதசார் பின்மையை பாதுகாப்போம் என்று வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இதை பத்திரிக்கையாளர் தூய வன் கொடியசைத்து துவக்கி வைத் தார். இதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.  இதில், 50 க்கும் மேற்பட்ட சிறு வர் சிறுமியர் கலந்து கொண்டனர். அவிநாசியில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மகாத்மா காந்தியின் உருவப்ப டத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண் ணன், அவிநாசி மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் பழனிச்சாமி, நடராஜ், மதிமுக பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று, அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் பேரூராட்சி முன்பு அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் பழனிசாமி, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் செல்வி, ஒன்றியத் தலைவர் சித்ரா, மாவட்ட நிர்வாகி சகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளான புதனன்று, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் இஸாரத்தலி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ப.மாரி முத்து, மாநிலக்குழு உறுப்பினர் அ.ஹாத்திம்தாய், மாவட்டக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஏ.கே.செல்வராஜ், ஏகே.பழனிச்சாமி, செபாஸ்டியன், முஸ்லீம் லீக் ஆதம் பாய், ஏஎஸ்.ஸ்டீல் முஸ்தபா, லைன்ஸ் கிளப் வெங்கடாசலம், காங்கிரஸ் நகரத் தலைவர் ஜலாலுதீன், நகைக்கடை ஜாவீத் பாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அனைவ ரும் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.