மே.பாளையம், மார்ச் 5- காரமடை வனப்பகுதி யில் மக்னா வகை காட்டு யானை உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறை யினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம், காரமடை வனப் பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியின் போது, நெல்லித்துறை காப்புக்காடு, மானார் சரக வனப்பகுதியில் சுமார் 8 வயதில் இருந்து 10 வயதுக்குட்பட்ட மக்னா வகை காட்டு யானை (தந்தம் இல் லாத ஆண் யானை) ஒன்று இறந்த நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது. யானையின் உடலில் எந்தவித காயங்களும் காணப்பட வில்லை. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து கோவை மண்டல உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமார், காரமடை வனச்சரக அலுவ லர் திவ்யா உள்ளிட்ட வனப் பணியாளர்கள் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று, ஆய்வு மேற்கொண்டனர். வன கால்நடை மருத்துவர் சுகுமார் முன்னிலையில், இறந்து கிடந்த யானை உடற் கூறு பரிசோதனை செய்யப் பட்டது. அதன் உடல் பாகங் கள் மாதிரி சேகரிப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றும், முதற் கட்ட ஆய்வில் உடல்நலக்குறைவு காரண மாக யானை இறந்திருக்கலாம் என்றும், ஆய்வு அறிக்கை வந்த பின்னர் தான் யானை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரி யும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக இப்பகுதியிலேயே இந்த யானை சுற்றி வந்த தாகவும், இதுவரை இந்த யானையால் யாருக் கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.