திருப்பூர், அக்.30- அட்சய பாத்திரமாக வந்தாரை வாழ வைத்த திருப்பூரை இன்று பிச்சை பாத்திர மாக மோடி மாற்றிவிட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் சிறப்பாசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் பாண்டியன் நகரில் ஞாயிறன்று ஒன்றியக்குழு உறுப்பினர் என்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மதுக்கூர் ராம லிங்கம் தீக்கதிர் சந்தா தொகையை பெற்று கொண்டு பேசியதாவது: சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன் றும் நடக்கும் தனி மனித தவறுகளை பெரி தாக்கி பக்கத்தை நிரப்பி வெளியிடும் பத்திரி கைகள் ஏராளமாக உள்ளன. தீக்கதிருக்கு அந்த வழக்கம் இல்லை. இந்த நாட்டை ஆள் பவர்களுக்கும், அதானிக்கும் உள்ள தொடர் பால் மக்கள்படும் இன்னல்களை தெரியப் படுத்துவதே தீக்கதிரின் முதன்மை பணி. கோக்கோ கோலா, பெப்சி போன்ற பெரு நிறு வனங்களிடம் விளம்பரங்கள் பெற்று கொண்டு கார்ப்ரேட்களுக்கு ஆதரவாக செய் திகள் வெளியிடமாட்டோம். கோவையில் ஜக்கி வாசுதேவாக இருந்த ஒருவரிடம் விளம்பரங்களைப் பெற்று கொண்டு பத்திரிக்கைகள் சத்குருவாக முன் னிறுத்தினர். ஆனால் தீக்கதிர் அவர் எப்படி காட்டை அழித்து வனவிலங்குகளின் வழித்த டத்தை ஆக்கிரமித்துள்ளார் என்பதை அம்ப லப்படுத்தி வருகிறோம். எத்தனையோ முறை எங்களை அணுகி விளம்பரம் தருகிறோம், புதிய மிஷின் வாங்க பணம் தருகிறோம் எங் களை பற்றி செய்தி வெளியிடாதீர்கள் என்று வலியுறுத்தினர். உங்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்கிற தன்மானம் தீக்கதிருக்கு மட்டும்தான் உள்ளது. ஒரு பத்திரிக்கை குழந்தைகளின் கக்கூஸை பார்த் தனர். நாங்கள் படிக்கும் குழந்தைகளின் வயிற்றைத்தான் பார்ப்போம். அதிமுக ஆட்சியிலிருந்தபோது வச்சாத் தியில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை முத லில் வெளி கொண்டுவந்தது தீக்கதிர். அந்த மக்கள் செங்கொடியுடன் அங்கு சென்ற கம்யூ னிஸ்ட்டுகளைக் கடவுள் என்று கூறுகின்றனர். எங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங் கெல்லாம் செங்கொடி செல்லும். இதுபோல் எத்தனையோ வழக்குகளை விரிவாக வெளியே கொண்டு வந்து செய்தி வெளி யிட்டது தீக்கதிர். இந்தியாவின் அட்சயபாத்திரமாக இருந்த திருப்பூரை மோடி பிச்சை பாத்திர மாக மாற்றி வருகிறார். ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு என்று தொடர்ந்து திருப்பூரின் கால்களை உடைத்து வருகிறார். தமிழ்நாடு அரசு மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கினால் குறைந்தபட்ச கையிருப்பு இல்லை என்று பிடித்து கொள்கிறார்கள். குறைந்தபட்ச கையிருப்பு இல்லை என்று கூறி இதுவரை
35 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ள தாக நாடாளுமன்றத்தில் நிதிஅமைச்சர் கூறு கிறார். இப்படி உழைக்கும் மக்களை கொள்ளை அடிக்கிறார்கள். 7லட்சத்து 35 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஒருவர் மோடி ஊழலை ஒழிப்பதாகக் கூறுகிறார். அவர் ஐபிஎஸ் ஆக இருந்து பிடித்த ரவுடி களை விட பாஜகவில் சேர்த்த ரவுடிகள்தான் அதிகம். எடப்பாடி பழனிசாமி இப்போது அந்த கட்சியுடன் கூட்டணியை முறித்து விட்டார். விவசாயிகள் மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்று மக்களைப் பாதிக் கும் சட்டங்கள் கொண்டு வந்தபோது ஆதரவு தெரிவித்துவிட்டு. அண்ணாமலையின் செய லுக்காக கூட்டணி முறிவு என்று அவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மறைமுக ஆட்சி நடத்துகிறது பாஜக. 2024 ஆம் ஆண்டு மக்கள் விரோத பாஜக அரசை தோற்கடித்து இந்தியா கூட்ட ணியை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று கூறினார். முன்னதாக பகத்சிங் சிலம்பாட்ட குழு வின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றி யக்குழு உறுப்பினர் எம்.கோபால் வரவேற் றார். மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் அ. சிகாமணி ஆகியோர் பேசினர். இதில், மாவட் டச் செயலாளர் செ.முத்துகண்ணன், முன் னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன். ஒன் றியக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.