districts

img

விளைச்சல் அதிகரிப்பு: ‘மா’ விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி, ஏப்.10- தருமபுரி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாங்காய்க்கு பெயர் போன பகுதிகளாக தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நடப் பாண்டு 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காரிமங்கலம், பாலக் கோடு, மொரப்பூர் ஆகிய பகுதிகளில் அதி களவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடு பட்டு வருகின்றனர். தருமபுரி மற்றும்  பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப் பட்டி, அரூர் ஆகிய வட்டாரத்திலும் மா சாகு படி செய்துள்ளனர். இங்கு செந்தூரா, அல் போன்சா, பெங்களூரா, நீளம், பங்கன பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைகின்ற மாம் பழங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநி லங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப் பட்டு வருகின்றன. பருவநிலைக்கு ஏற்ப மா உற்பத்தி திறன் மாறுபடும். இதனால் மா உற்பத்தி சராசரி விலையை கணிக்க முடியாத நிலையில் உள் ளது. தருமபுரி மாவட்டத்தில் 10 மாங்கூழ் தயா ரிக்கும் சிறிய ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் ஈரான், துபாய், உள்ளிட்ட  நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்படு கிறது.

மா சீசன் நவம்பர் கடைசியில் துவங்கி  டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியது. தற்போது காய் கள் கொத்து கொத்தாக காய்ந்து தொங்கு கிறது. இந்த வருடம் மா பூ பிடித்த போது மாவட்டத்தில் நல்ல பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தது. இத னால் மாம்பூக்கள் அதிகமாக உதிர்ந்தது. தற் போது கோடை காலம் தொடங்கியதால் வெயில் மற்றும் கோடை மழையில் மாம் பிஞ்சுகள் உதிர்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஒரு சில இடங்களில் மாங்காய் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகை யில், தருமபுரி மாவட்டத்தில் இந்த வருடம் அதிக மழை பொழிந்துள்ளதால், மா விளைச் சல் அமோகமாக உள்ளது. அதேபோல் கடு மையான பனிப்பொழிவும் இருந்ததால், சில  மரங்களில் மாம்பூக்கள் கருகி காய்ந்து  போனது. மற்ற ரகங்களை விட பெங்களூரா நல்ல விளைச்சல் உள்ளது. மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாங்கூழ் ஆலைகள் உள் ளன. நாங்கள் விளைவிக்கும் மாங்காய் களை அறுவடை செய்து ஆலைக்கு நேரடி யாகச் சென்று விற்பனை செய்து வருகி றோம். மற்ற ரகங்களான செந்தூரா, அல் போன்சா, நீலம், பங்கன பள்ளி ஆகியவை களை அறுவடை செய்து தினசரி மார்க் கெட்டில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ள தால், தண்ணீர் இல்லாத மாமரங்களில் மாங் காய் உதிர்ந்து வருகிறது. நல்ல தண்ணீர் பாய்ச்சினால் உதிர்வது தடுக்கப்படுகிறது. மேலும், 30 வருடங்களுக்கு மேலாக மா  விவசாயம் செய்து வருகிறோம். காரிமங்க லம் ஒன்றியத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது மாம்பூ பூப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை மருந்து கடைகளில் ஆலோசனை கேட்டு தான் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மாங்காய் விளைச்சல் உள்ள தாகவும், ரூ.18 முதல் ரூ.20 வரை நல்ல விலை போவதால் லாபகரமாக இருக்கும் என விவ சாயிகள் கூறுகின்றனர்.