தருமபுரி, நவ.5- மார்க்சிஸ்ட் கட்சியின் ஏரி யூர் ஒன்றியச் செயலாளராக எம்.தங்கராஜி தேர்வு செய் யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றிய 4 ஆவது மாநாடு, பொன்னப்பகவுண்டர் சின்னப்பிள்ளையம்மாள் திரு மண மண்டபத்தில் தோழர் சீத்தாராம் யெச் சூரி திருமண மண்டபத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எம்.குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கே. மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்த னர். நாகமரை ஊராட்சி மன்ற முன்னாள் தலை வவர் என்.பி.இளங்கோவன் செங்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் இ.சிவசக்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.தங்கம் மாள் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் துவக்க வுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் என். பி.முருகன் அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட்டில், காவேரி உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். பென்னாகரத்தில் தொழிற் பேட்டை ஏற்படுத்த வேண் டும். மீனவர் கூட்டுறவு சங் கத்தை தொடங்க வேண்டும். கோட்டையூர் மேம்பாலப் பணி களை விரைந்து துவங்க வேண் டும். ஏமனூர் கிராம மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஏமனூர், ஒட்ட னூர், தொன்னகுட்டஅள்ளி பகுதிகளில் நீண்டநாட்கள் விவசாயம் செய்யும் விவசாயி களை, வனத்துறையினர் நிலவெளியேற்றம் செய்வதை கைவிட வேண்டும். தொன்ன குட்டஅள்ளி முதல் சாமத்தாள் வரை சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் ஏரியூர் ஒன்றியச் செயலாளராக எம்.தங்கராஜி மற்றும் 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் நிறைவுரையாற்றினார். முடி வில், ஒன்றியக்குழு உறுப்பினர் சி.குழந்தை சாமி நன்றி கூறினார்.