கோவை, நவ.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை எஸ்.எஸ். குளம் மேற்கு ஒன்றியக் குழு செயலாளராக எம்.சண்முகசுந் தரம் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் கோவை மாவட் டம், எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியக் குழுவின் 24 ஆவது மாநாடு சரவணம்பட்டி, கௌமார மடாலய மண்டபம், தோழர் கே.சிவசாமி நினைவரங் கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கே.சண் முகம், ஜ.உஷா, பி.குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ்.விஜயலட்சுமி கொடியேற்றினார். எஸ்.ரமேஷ் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றி னார். ஒன்றியச் செயலாளர் எம். சண்முகசுந்த ரம் வேலை அறிக்கையையும், ஆர்.செந்தில் குமார் வரவு செலவு அறிக்கையையும் சமர் பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் வாழ்த்துரை வழங்கினார். இம்மாநாட்டில், சிவானந்த புரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். சின்னவேடம்பட்டி குளத்திற்கு அத்திக்கடவு குடி நீரை கொண்டு வந்து குளத்தின் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை சரி செய்து செப்பனிட வேண்டும். சரவ ணம்பட்டி மற்றும் துடியலூர் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைக்க வேண்டும். மாநகராட்சி சொத்து வரி, குப்பை வரி மற்றும் மின்சார கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியக் குழு செயலாளராக எம். சண்முகசுந்தரம் மற்றும் 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் நிறை வுரையாற்றினார். முடிவில், பி.பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.