மலையாள பண்பாட்டு மேடை மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் உடையம்பாளையம் கிளைகள் சார்பில் வயநாடு நிவாரண நிதி தொகை ரூ.20 ஆயிரத்தை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.தெய்வேந்திரன், என்.ஆர்.முருகேசன் ஆகியோரிடம், கோவை மாநகராட்சியின் சிபிஎம் மாமன்றக் குழு தலைவர் வி.ராமமூர்த்தி வழங்கினார். இதில், கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடை செயலாளர் கே.சந்தோஷ், நிர்வாகிகள் ஏ.கோவிந்தன் குட்டி, கே.சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.