districts

img

கொள்கை முடிவு எடுக்கும் வரை சந்தை மதிப்பில் இழப்பீடு: அமைச்சரிடம் விவசாயிகள் நேரில் கோரிக்கை

திருப்பூர், ஜன.18 - தெரு நாய்களை கட்டுப்படுத்து வதற்கு அரசு ஒரு கொள்கை முடிவு  எடுக்கும் வரை, அன்றாடம் கால்நடை களை இழந்து வாடும் விவசாயிக ளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு  வழங்க வேண்டும் என்று அமைச்சரி டம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களால் விவசாயிக ளின் வளர்ப்பு கால்நடைகள் பலியா வது தொடர்ந்து வரும் நிலையில், சனிக்கிழமை மாநில செய்தி மற்றும்  தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகளை சந்தித்தார்.  கால்நடை இழப்பு தொடர்ந்து வருவதைப் பற்றி கவலையுடன் தெரி வித்த விவசாயிகள் அமைச்சரிடம்  தங்கள் வாழ்வாதாரத்தை பாது காக்க கோரிக்கை விடுத்தனர்.  குறிப்பாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கடந்த  சில ஆண்டுகளாக தெரு நாய்கள் அதிகப்படியாக பெருகி உள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ் வாதாரத்தை இழந்து மிகப்பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து அரசுக்கும் மாவட்ட நிர் வாகத்துக்கும் பலமுறை மனு கொடுத்து போராட்டங்கள் நடத்தி யும் உள்ளனர்.  கடந்த நவம்பர் 23 அன்று மாவட்ட  ஆட்சியர் அறிவுறுத்தலின்படி காங் கேயம் வட்டாட்சியர், அடுத்த நாற் பத்தி ஐந்து நாட்களுக்குள் இழப் பீடு பெற்றுக் கொடுக்கப்படும் என்று  கடிதம் கொடுத்தார். ஆனால் 50 நாட் கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இது விவசாயிகள் மத்தி யில் விரக்தியையும், அதிருப்தியை யும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட கால்நடை களும் 500க்கும் மேற்பட்ட கோழிக ளும், தெரு நாய்கள் கடித்து பலியாகி  உள்ளன. பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த பொறுப்பேற்க வேண் டிய உள்ளாட்சி அமைப்புகள் அதற்கு  உண்டான கட்டமைப்பை ஏற்படுத்த  எள்ளளவும் முயற்சி செய்யவில்லை.  நாய்களுக்கு ஏபிசி எனப்படும் இனப் பெருக்க கட்டுப்பாடு செய்தாலும் விவசாயிகளின் பிரச்சனைக்கு இது  தீர்வாக அமையாது.  எனவே தமிழக அரசு ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த முன்  வர வேண்டும். இதன் மூலம்தான் ஒரு  நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடியும். அரசு கொள்கை முடிவு எட்டும் வரை  கால்நடைகளை மட்டுமே நம்பி இருக் கும் விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை காப்பாற்ற, கால்நடைகள் இழப்புக்கு, அவர்களுக்கு பொருளா தார இழப்பை ஈடு கட்டும் வகை யில், சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் கால்நடைகளை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியவில்லை. மிகப்பெரும் மன உளைச்சலுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று  உடனடியாக நிவாரணம் அறிவித் தால் அது மிகப் பெரும் அளவில் உத வியாக இருக்கும் என்றும் அமைச் சர் சாமிநாதனிடம் கேட்டுக் கொண் டுள்ளனர்.