கோவை, அக். 7- கோவையில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர், மாநக ராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்று நெடுந்தூரம் ஓடினர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகம், பொது மக்களிடையே உடன் தகுதி கலாச்சா ரத்தை புதுப்பிக்கும் நோக்கத்தில், அறிஞர் அண்ணா நெடுந் தூர ஓட்ட போட்டியானது ஆண்டுதோறும் அனைத்து மாவட் டங்களிலும் நடத்தப்படுகிறது. கோவை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கி, எல்ஐசி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநக ராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணை யாளர் வி.பாலகிருஷ்ணன், மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் துவக்கி வைத் தனர். இப்போட்டி 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண் களுக்கு 8 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண் களுக்கு 5 கிலோமீட்டர் என நடத்தப்பட்டு, முதல் பரிசாக 5000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய், நான்கு முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த நெடுந்தூர் ஓட்டப்போட்டியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் போட்டியாளர் களுடன் இணைந்து ஓடினர். தருமபுரி இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தே.சாந்தி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், வீரர், வீராங்கனைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண் டார்கள்.