districts

img

கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்பக் குழு துவக்க விழா

உடுமலை செப்.26-  அணைக்கடவு பஞ்சாயத்து ராமச்சந்திராபுரம் கிராமத்தில்  கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்பக் குழு துவக்க விழா  வியாழனன்று நடைபெற்றது. உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை தொழில்நுட்ப தகவல்  மையத்தின் சார்பில் கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பக் குழு வின் துவக்க விழா அணைக்கடவு பஞ்சாயத்து ராமச்சந்திரா புரம் கிராமத்தில் நடைபெற்றது. இவ்விழாவை கல்லூரி முதல் வர் பா.குமரவேல் தலைமையேற்று நடத்தினார். குடிமங்க லம் வட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா மற்றும்   அணைக்கடவு கனரா வங்கி மேலாளர் பிரவீன் குமார் ஆகி யோர் வாழ்த்து பேசினார். ராமச்சந்திராபுரம் கால்நடை மருந் தகத்தின் கால்நடை உதவி மருத்துவர் குமார் கலந்து கொண் டார். இந்நிகழ்வில், பாலில் கொழுப்பு பிரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும், நறுமணப் பால் தயாரிப்பு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இக்குழுவில் பதிவு செய்த  52 கால்நடை வளர்ப்போர் பங்குபெற்று பயன் பெற்றனர். மேலும் மூன்றாம் ஆண்டு கால்நடை மாணவர்கள் மற்றும்  பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.