சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஜெ.தர்மராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் சி.சண்முகம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே.விசுவநாதன், சங்கத்தின் துணை அமைப்பாளர் கே.லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.