districts

img

இலக்கியக் களம் ஒன்பதாவது நிகழ்வு

உடுமலை, அக்.14 -  உடுமலை இலக்கியக் களத்தின் புரட்டாசித் திங்கள் ஒன்பதாவது இலக் கிய நிகழ்வு உடுமலைப் பேட்டை பசுபதி வீதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் சனியன்று ஆசிரியர் செல்லத்துரை தலைமையில் நடை பெற்றது.  ஆசிரியர் முனியப்பன் வரவேற்றார். சித்தூர் அரசு கலைக் கல்லூரி  முனைவர் ம.வீ.ரமேஷ் குமார், பிர பஞ்சனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் எனும் தலைப்பில் நூலை அறிமுகப் படுத்தி உரையாற்றினார். அருள்மிகு பழனி யாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியர்  தி.சத்திய கலா, பூமணியின் பிறகு நாவலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அரசு கல்லூரி மாணவர் பவித்ரா, பொள் ளாச்சி இலக்கிய வட்டப் பொறுப்பாளர் பூபாலன், ஆசிரியர் சோலை மாயவன்,  பட்டிமன்ற பேச்சாளர் சுடர், வெ.ரங்கநாதன், ரசியா பேகம், கவிஞர் இளையவன் சிவா  ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். படித்ததில் பிடித்ததையும் வாசித்துக் காட்டினர். நிறைவாக கவிஞர் ஆசிரியர் சிவஞானம் நன்றி கூறினார்.