districts

பட்டா இடத்தை அளந்து தரக்கோரி பட்டியலின மக்கள் போராட்டம்

திருப்பூர், ஆக.2- ஈட்டிவீரம்பாளையம் பகு தியில் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளந்து தர வேண்டும் என வலியுறுத்தி, பட்டியலின மக் கள் குடியேறும் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகு தியில் 1994 ஆம் ஆண்டு அப்பகுதி யைச் சேர்ந்த ஏழை, எளிய, பட்டிய லின மக்கள் 122 பேருக்கு அரசு புறம் போக்கு இடத்தில் நிலப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த இடத்தில் ஒரு சிலர் சாலை அமைத்துள்ள னர். அப்போதைய ஊராட்சி நிர்வா கத்தில் போதுமான நிதி இல்லாத தால், அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்த முடியவில்லை. பிற்காலங்க ளில் ஏற்படுத்தி தருவதாக பஞ்சா யத்து நிர்வாகம் தெரிவித்ததால், அங்கிருந்து வந்துவிட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். இந்நி லையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு சிலர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், இந்த இடம் கோவில் நிலம் என்றும், அரசு துறை சார்ந்த எந்த பணிகளுக்கும் இந்த நிலத்தை பயன்படுத்தக்கூடாது என மனு அளித்தனர். இதையறிந்த நிலப் பட்டா பெற்ற மக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, முறையாக நிலம் அளந்து தர வேண்டும் என மனு அளித்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 28 ஆம் தேதியன்று இப்பகுதியில் உள்ள 1.15 ஹெக்டேர் நிலத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், பெரு மாநல்லூர் கிராமத்தில் வசிக்கும் இலங்கை தமிழருக்கு வீடுகட்ட அனுமதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அதில், இந்த நிலத்தில் கோவில், மசூதி, உள்ளிட்ட வைகள் இல்லை எனவும் குறிப்பிட் டுள்ளது. பட்டா வழங்கிய நிலத்தை அளந்து தரக்கோரி மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால் வெள்ளியன்று பட்டா பெற்ற பட்டி யலின மக்கள் தங்களுக்கு வழங் கிய நிலத்தில் குடியேற முயற்சித்த னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சி யர் மற்றும் காவல் துறையினர் இன் னும் நான்கு நாட்களில் மாவட்ட ஆட்சியரிடம் பேசி சுமூக தீர்வு ஏற்ப டுத்துவதாக உறுதி அளித்ததை யடுத்து கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பி.கே.கருப்பு சாமி,மகாலிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், ஈட்டி வீரம்பாளையம் கிளைச்செயலா ளர் எம்.கே.கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். உரிய தீர்வு ஏற்படாவிட்டால் மார்க்சிஸ்ட்  கட்சியின் தலைமையில் போராட் டத்தில் ஈடுபடுவோம் என பொது மக்கள் தெரிவித்தனர்.

காங்கயம் தனி வட்டாட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, நிழலி அருகே உள்ள  என்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்கள், ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று மனு ஒன்றை அளித்த னர். அதில், குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாத பட்டியலினத் தைச் சேர்ந்த எங்கள் 10 குடும்பங்களுக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு  ஊதியூர் முதலிபாளையம் பகுதியில் தனி வட்டாட்சியர் மூலம் குடியி ருப்பதற்காக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்த பின்னரும், எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கு உரிய இடத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் சொந்த வீடு கட்டி குடியேற முடியாத சூழ்நிலையில் உள் ளோம். எனவே, எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து தருவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.