தருமபுரி, நவ.24- வளர்ச்சித்திட்டப் பணிகளை முடக்கும் துணைத்தலைவரைக் கண்டித்து, பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் சாலை மறியலில் ஈடுபட்டார். தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், மொரப்பூர் ஊராட்சி, சந்தை மேட்டு பகுதியில், ஊராட்சி மன்றத் தலைவர் உமாராணி தலைமையில் சனியன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட் சித் தலைவரால் செயல்படுத்த முடி யாத திட்டப்பணிகளின் பட்டியலை பேனர் மூலம் அச்சடிக்கப்பட்டு வைக் கப்பட்டிருந்தது. கிராம சபைக்கூட் டத்தில் அரசு அறிவித்துள்ள தீர்மா னங்களுடன், ஊராட்சித் துணைத் தலைவரின் ஒத்துழைப்பின்மை தொடர்பாக, உரிய காலத்தில் ஆட் சியரால் உத்தரவு வழங்கப்படாத தால் பணிகள் செய்ய இயல வில்லை. அரசாங்கத்தால் வழங்கப் பட்ட நிதிகள் பயன்படுத்தாமல் உள்ளதாகவும், நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப் பணிகளை பட்டி யலிடப்பட்டன. இதுதொடர்பாக மொரப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் உமா ராணி கூறுகையில், துணைத்தலை வர் இதுவரை எந்த ஒரு கூட்டத்தி லும் கலந்து கொள்ளவில்லை. ஒத் துழைப்பும் அளிக்கவில்லை. இத னால் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்ய முடியவில்லை. நான் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் என்ப தால், என் மீது அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியா மல் நிறுத்தி வைத்துள்ளார், என் றார். இந்நிலையில், பட்டியலின பெண் தலைவருக்கு ஏற்பட்ட அவலங்களை தெரிவிக்கும் வகை யில் கிராம மக்களுடன் இணைந்து ஊராட்சி மன்றத் தலைவர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து துணை காவல் கண்கா ணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சுமார் அரை மணி நேரத்திற்கு பின்பு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.