districts

img

தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட லைப் காட் படையினர்

மேட்டுப்பாளையம், அக். 6- மது போதையில் பவானி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை லைப் காட்  படையினர் போராடி மீட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை  மங்களக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவ ரின் மகன் அஜித்குமார் (23) இவர் மேசன் வேலை செய்து வரு கிறார். இவர், ஞாயிறன்று மதியம் மேட்டுப்பாளையம் அடுத் துள்ள நெல்லித்துறை வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே  உள்ள பவானி ஆற்றுப்பாலத்தின் மேல் இருந்து மது போதை யில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த லைப் கார்டு உதவி ஆய் வாளர் ராஜன் தலைமையிலான லைப் கார்ட் குழுவினர் உடன டியாக பவானி ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய அஜித்கு மாரை பத்திரமாக பரிசல் மூலம் கரை கொண்டு வந்து முதலு தவி சிகிச்சை அளித்து அவருக்கு அறிவுரை கூறி அவரது உற வினர்களுடன் அனுப்பி வைத்தனர். மழை காலங்களில் பவானி ஆற்றில் சிக்கி கொள்வோரை  மீட்க தனியாக காவல்துறை சார்பில் பயிற்சி பெற்ற  காவலர்கள் கொண்ட லைப் காட் படையினர் அமைக்கப்பட் டுள்ளதும் இவர்கள் பவானியாற்றங்கரையோர பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.