districts

img

விவசாயிகளின் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்

உடுமலை, ஜன.8 - வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து விவசாயிகளின் உயிருக்கு உரிய பாதுகாப்பை வனத்துறை தர வேண்டும் என செவ்வாயன்று உடு மலை வனசரக அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட் டத்தில் கோரிக்கை விடப்பட்டது. உடுமலை வனத்துறை அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட் டத்தில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம் ஏற்பட்ட நிலையில் தற் பொழுது விவசாயிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் வன  விலங்குகளால் சேதமடைந்த விளைப யிர்களுக்கு உரிய நிவாரணம், உரிய காலத்தில் வழங்க வேண்டும். காட்டுப்  பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.  மேலும் வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறாமல் தடுக்க வனத்தில் விலங்குகளுக்கு உணவு தரும் பயன்தரும் மரங்களை நடவேண்டும். வனத்தை முறை யாக பராமரிப்பு செய்ய வேண்டும். வன  எல்லையில் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோலார் மின் வேலி களை அமைக்க வேண்டும். காட்டுப் பன் றிகள் விளை நிலங்களுக்கு வராமல்  தடுக்கும் வகையில் மருத்துகளை  தெளிக்க வேண்டும் என்றார்கள். பின்னர் வனச்சரகர் தெரிவிக்கை யில் வனவிலங்குகள் சேதப்படுத்தம் விளைபயிர்கள் சேதம் குறித்து புகார்  தெரிவிக்க வனத்துறை அலுவலகத்தில்  சிறப்பு அலுவலர் நியமனம் செய்யபட்டு  உள்ளார். வனவிலங்குகள் தாக்குதலை  தடுக்கம் வகையில் கிராமங்களில் விழிப் புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். மேலும் வனத்தில் பயன்தரும் மரங்கள்  மற்றும் மருத்துகளை தெளிக்க உயர் அதிகாரிகளுக்க தெரிவிக்கப்படும் என் றார்.  வனவிலங்குளால் விளைநிலங்க ளில் இருக்கும் பயிர்கள் சேதமடைந் தால் வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்க சிறப்பு வசதிகளை ஏற்படுத்த  வேண்டும். மேலும் இது குறித்து பொது  மக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச் சாரம் செய்ய வேண்டும்.  வனத்துறை நடத்தும் கூட்டத்தில் வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை வைத்தார் கள்.  முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில்  வனத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட  தலைவர் எஸ்.ஆர் மதுசூதணன், தென்னை விவசாயிகள் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் அருண்பிரகாஷ்,  சங்கத்தின் உடுமலை நிர்வாகிகள்  பால தண்டபாணி, ராஜகோபால் மடத்துக் குளம் தாலூகா தலைவர் ராஜரத்தினம்  உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து  கொண்டார்கள்.