districts

img

இன்று ‘பீமா சுகம்’ எதிர்ப்பு போராட்டம்: எல்.ஐ.சி. முகவர்கள் ஹைதராபாத் பயணம்

திருப்பூர், டிச. 8- எல்.ஐ.சி. முகவர்கள் வாழ்வாதாரத்தை சீர்கெடுக்கும் ‘பீமா சுகம்’ செயலி உருவாக் கத்தை நிறுத்தக் கோரி ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஆர்.டி.ஏ. தலைமை அலுவலகம் முன் டிசம்பர் 9 ஆம் தேதியன்று (இன்று)ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள முகவர்களின் எதிர்ப்பை காட்டும் வண்ணம் எல்ஐசி முக வர்கள் சங்கத்தின் அகில இந்திய கமிட்டி யின் அறைகூவலின்படி இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது. திருப்பூர் கிளை சார்பாக மாநிலச் செயலா ளர் பி.குமார் தலைமையில் 20க்கும் மேற் பட்ட முகவர்கள் ஹைதராபாத் போராட்டத் தில் பங்கேற்கின்றனர். இவர்களை வாழ்த்தி, முழக்கமிட்டு வழியனுப்பும் நிகழ்வு திருப்பூர் புகைவண்டி நிலையத்தில் வியாழனன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில செயலாளர் பா.ராஜேஷ், கிளை தலைவர் பழனி, கிளை செயலாளர் ராமசுப்பு, கிளை துணை செயலா ளர் திருநாவுக்கரசு மற்றும் அனந்த நாரா யணன், நாகேந்திரன், ஆனந்த், சித்ரா ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;