districts

img

அனைவருக்குமான பென்சன் திட்டம்: எல்ஐசி பென்சனர் சங்க மாநாடு வலியுறுத்தல்

கோவை, மார்ச். 5- புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்து, அனைவருக்குமான பென் சன் திட்டத்தை உருவாக்க வேண்டும்  என எல்ஐசி பென்சனர் சங்க மாநாடு  வலியுறுத்தியுள்ளது. கோவைப் பகுதி எல்ஐசி பென்ச னர் சங்கத்தின் 13 ஆவது மாநாடு கோவை இராமநாதபுரம் எஸ்.என்.அரங்கில் டி.கோபாலகிருஷ்னன் தலைமையில் நடைபெற்றது. இதில்,  அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ச னர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜே.குருமூர்த்தி பங்கேற்று சிறப்பு ரையாற்றினார். கோவை பகுதிச் செயலாளர் பி.வாசுதேவன் மற்றும் பொருளாளர் எஸ்.டி.ரங்கநாதன் ஆகியோர் அறிக்கைகளை முன்மொழிந்தனர். மாநாட்டை வாழ்த்தி கோவை பகுதி இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.துளசீதரன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க செயலாளர் ஆர்.சங்கரநாராயண் ஆகியோர் உரையாற்றினர்.  இதில், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஓய்வூதியர்களின் நிலுவை யில் உள்ள கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். மூத்த குடிமக்க ளுக்கு  நிறுத்தப்பட்ட ரயில் சலுகை களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் சலுகை வழங்க  வேண்டும். மருந்து, மாத்திரைகளின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வும், அனைவருக்குமான பென்சன் திட்டத்தை உருவாக்க வேண்டும், பொதுத்துறை, பொது இன்சூரன்ஸ் துறைகளை ஒன்றாக இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக மாநாட்டில், 75 வயது  நிறைவுற்ற சங்க ஊழியர்கள் பொன்னாடை அணிவித்து கெளர விக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மாநாட் டில் சங்கத்தின் தலைவராக பி.வி.கல் யாணசுந்தரம், பொதுச்செயலா ளராக பி.வாசுதேவன், பொருளாள ராக எஸ்.டி.ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், டி.ஜான்சுந்தர்ராஜ் நன்றி கூறினார். மாநாட்டில் திரளான எல்ஜசி பென்ச னர்கள் பங்கேற்றனர்