districts

img

பாலிசி பிரீமியத்திற்கு ஜிஎஸ்டி வரியை நீக்க எல்ஐசி முகவர்கள் மாநாடு கோரிக்கை

திருப்பூர், ஆக. 5 – எல்ஐசி பாலிசிதாரர்கள் செலுத்தக் கூடிய பாலிசி பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய எல்ஐசி  முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) திருப் பூர் கிளை மாநாடு வலியுறுத்தி உள் ளது.  திருப்பூரில் சனியன்று அகில இந் திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் திருப் பூர் கிளை 10ஆவது மாநாடு நடை பெற்றது. சிஐடியு மாவட்ட அலுவலகத் தில் நடைபெற்ற இம்மா்நாட்டிற்கு முன் னதாக, கோவை கோட்டக்குழு உறுப் பினர் வி.மணிகண்டன் சங்கக் கொடி யேற்றி வைத்தார். கிளை செயற்குழு உறுப்பினர் டி.சந்திரா வரவேற்றார். கிளைத் தலைவர் கே.பழனி தலைமை  உரையாற்றினார். லிகாய் மாநில கல் விக்குழு உறுப்பினர் பா.ராஜேஷ் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசி னார்.  கிளைச் செயலாளர் ஈ.ராமசுப்பிர மணியம் அறிக்கையை முன்வைக்க, பொருளாளர் யு.திருவள்ளுவர் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தார். லிகாய் கோவை கோட்டத் தலைவர் பிரேம்குமார் வாழ்த்திப் பேசினார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து மாநிலச் செயலாளர் பி.குமார் உரையாற்றினார். புதிய கிளைத் தலைவர் – பழனி, துணைத் தலைவர்கள் கண்ணன், தாமோதரன், ஜார்ஜ் வர்க்கீஸ், கிளைச்செயலாளர் –  மாலதி, இணைச் செயலாளர்கள் ராஜூ,  பழனிவேல், சந்திரா மற்றும் பொருளாளர் – ஜி.ஆனந்த் மற்றும் 23 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். கொரோனா காலத்தின்போது நிறுத் தப்பட்ட எல்ஐசி முகவர்கள் தினத்தை மீண்டும் சிறப்பாக கொண்டாட வேண் டும், முகவர்களுக்கு மருத்துவ மற்றும்  ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இம்மாநாட்டில் திருப்பூர் கிளையைச் சேர்ந்த 120 முக வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் லிகாய் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கோவர்த்தன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். கிளை செயற் குழு உறுப்பினர் ஜெ.சித்ரா நன்றி கூறி னார்.