districts

img

எல்ஐசி முகவர் சங்கம் தர்ணா

தருமபுரி, அக்.29- கமிசன் குறைப்பு நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய முகவர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்ட னர்.  இந்தியாவில் 14 லட்சம் எல்ஐசி முகவர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கின்ற கமிசன் குறைப்பு நடவடிக் கையை கைவிடவேண்டும். முகவர்களின் உரிமையை பறிக்ககூடாது. முகவர்களுக்கு கிடைக்க வேண்டிய கமி சனை உயர்த்தி வழங்கவேண்டும். முகவர்களுக்கு மருத் துவ காப்பீடு உறுதிபடுத்த வேண்டும். குரூப் இன்சூ ரன்ஸ் வயது வரம்பை நீக்க வேண்டும். பாலிசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி சேவை  மற்றும் ஜிஎஸ்டி வரியை நீக்கவேண்டும். பாலிசி கடனுக் கான வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும். முகவர் மூலம் பாலிசிக்கான பத்திரத்தை வழங்க வேண்டும். பாலிசிக்கான பிரிமியத்தை குறைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி எல்ஐசி  அலுவலகம் முன்பு திங்களன்று, அகில இந்திய முக வர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு முகவர் சங்க தலைவர் மந் திரி தலைமை வகித்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ் வரன் தர்ணாவை துவக்கி வைத்து பேசினார். முகவர் சங்க நிர்வாகிகள் வி.சக்திவேல், பி.எம்.ஆறுமுகம், எஸ். மாதையன், டி.டி.மரியாலூயிஸ், எம்.சக்திவேல், தேவேந் திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ் வரன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ் ணன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.