அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், “அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்” கருத்தரங்கம் சேலம் வி.பி.சிந் தன் நினைவகத்தில் ஆர்.வைரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.ராணி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்டத் தலைவர்கள் எஸ்.எம்.தேவி, க.பெருமா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தோழர் சங்கரய்யாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.