districts

img

கல்வி கற்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது! ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை துவக்கிவைத்து முதல்வர் பேச்சு

கோயம்புத்தூர், ஆக. 9 - 6-ஆம் வகுப்பு முதல்  12-ஆம் வகுப்பு வரை அர சுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி யில் சேரும் மாணவர் களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’  திட்டத்தை அறி வித்த முதல்வர் மு.க. ஸ்டா லின், இந்த திட்டத்தை வெள்ளிக்கிழமையன்று (ஆக.9) கோவை அரசுக் கலைக்கல்லூரியில் நடை பெற்ற விழாவில் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு ‘பற்று அட்டை’களை வழங்கி உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:

மனதிற்கு நெருக்கமான தமிழ்ப் புதல்வன்திட்டம்

இந்நிகழ்ச்சிக்கு வரு வதற்கு முன்பே, நேற்றிரவு (வியாழனன்று) உங்களது (மாணவர்களது) வங்கிக் கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் பணத்தை போட உத்தர விட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், ஒரு சில திட்டங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். வரலாற்றில் பெயர் சொல்லும் திட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை துவக்கி வைக்க கோவைக்கு வந்துள்ளேன். மாணவிகளுக்கு வழங்கப் படுவது போல மாணவர் களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையேற்று உருவாக்கப் பட்டது தான் தமிழ்ப் புதல்வன் திட்டம்.

ஒரு டிரில்லியன்  டாலர் பொருளாதாரம்

உயர்கல்வியில் மாண வர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், அரசு, அரசு  உதவிபெறும் மாணவர் களை சாதனையாளர்களாக மாற்றவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் தொழில் கல்வி பயிலும் மாணவர் களும் பயன்பெறலாம். 3.78 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 380 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் மாணவர்கள் வங்கிக் கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும். உங் களின் குடும்பத்தில் ஒருவ னாக தந்தையாக இருந்து இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். 

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் நிலையை உரு வாக்க வேண்டும். மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்புகள் வர வேண்டும். பள்ளிப் படிப்பு முடித்த ஒரு மாணவர் கூட, உயர்கல்வி படிக்காமல் திசை மாறிப் போய் விடக் கூடாது; நல்ல வேலை வாய்ப்பைப் பெற வேண் டும். இது தான் என் கனவு. அதற்காக கடுமையாக உழைத்து பல புதிய திட்டங்களை உருவாக்கி யுள் ளேன். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும்.

வினேஷ் போகத்தின் அசாத்திய துணிச்சல்

கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அந்த தடைகள் உடைத் தெறியப்பட வேண்டும். வினேஷ் போகத் தடைகளை  உடைத்து அசாத்திய துணிச் சல் உள்ள பெண்ணாக நாம் எல்லோரும் பாராட்டும் வகையில் கொடி கட்டி பறந்து கொண்டுள்ளார். தடைகள் என்பது உடைத் தெறியத் தான். தடையை பார்த்து சோர்ந்து, முடங்கி விடக்கூடாது. நான் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத் துள்ளேன். உங்கள் வெற்றி க்கு பின்னால் திராவிட மாடல் அரசு இருக்கும்.  

இவ்வாறு முதல்வர் கூறினார்.