நாமக்கல், ஏப்.15- தீண்டாமைக்கொடுமைக்கு முடிவு கட்டுவோம், சாதியத்தின் ஆணி வேரை அடியோடு பிய்த்தெரிவோம் என்கிற உறுதிமொழியேற்போடு, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்வை மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாண வர், மாதர், வாலிபர் சங்கத்தினர் எழுச்சி யோடு கொண்டாடினர். புரட்சியாளர், டாக்டர் அம்பேத் காரின் 132 ஆவது பிறந்தநாள் சமூக நீதி நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, நாமக்கல் ராசி புரத்தில், அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். இந்நிகழ்வில், சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.செல்வராசு, மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.ராணி உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில், மாண வர் சங்க மாநில செயலாளர் க.நிரூபன் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் தே. சரவணன், மாவட்ட தலைவர் மு.தங்க ராஜ் உள்ளிட்ட திரளான மாணவர்கள் பங்கேற்றனர். நாமக்கல் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற உறுதி மொழியற்பு நிகழ்வில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பல் வேறு பகுதிகளில் நடைபெற்றது. ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா வில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செய லாளர் மா.அண்ணாதுரை, சிறு பான்மை மக்கள் நலக் குழு தலைவர் ப.மாரிமுத்து, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ். சுப்பிரமணி, நகர செயலாளர் பி.சுந்தர ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, சாதி ஒழிப்பு, ஒரே ஊரு, ஒரே சுடுகாடு என்ற முழக்கம் முன்னெ டுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தைப் பாதுகாத்திட உறுதி மொழியும் எடுக்கப் பட்டது. இதேபோன்று, ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் மூலப்பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம், அண்ண மார் பெட்ரோல் பங்க், வெண்டி பாளைம், திண்டல் காரப்பாறை, ஊனாத்திப்புதூர், துரைராஜ் நகர் மற்றும் அந்தியூரில், கூடுமைனூர், குண்டுமூப்பனூர் ஆகிய இடங் களிலும், பெருந்துறையில், வாவிக் கடை, பவானி தாலுக்காவில், கவுந்தப் பாடி, பவானி, வேலமரத்தூர், சிவகிரி, புளியம்பட்டி காந்தி நகர், சத்திய மங்கலம், மேட்டுகடை, சமநகர் ஆகிய இடங்களிலும் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் ததீஒமு மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, ஏ,எம்.முனு சாமி, பாலசுப்ரமணி, லலிதா, என்.பழனி சாமி, கே.சி.ரங்கசாமி, கே.எம்.விஜய குமார், வாசுதேவன், சசி, ஏ.கே.பழனி சாமி, சொங்கப்பன் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர்.
தருமபுரி
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன், மாவட்ட தலைவர் பி.ஜெயராமன், மாவட்ட பொருளாளர் கே.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்.எஸ்.கிரைஸாமேரி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அரசியல் சாசனத்தை பாதுகாப்போம், சாதியற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்கிற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அ.குமார் உள் ளிட்ட திராளனோர் பங்கேற்றனர். இதே போன்று கடத்தூர், அரூர், கம்பை நல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணாமலை பட்டி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.
கோவை
கோவையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா எழுச்சியோடு கொண் டாடப்பட்டது. கோவை காந்திபுரத்தில் உள்ள தபெதிக அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கு, தீஒமு மாவட்ட செய லாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். இதில், தீஒமு மாநில துணைச் செய லாளர் யு.கே.சிவஞானம், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், திராவிடர் தமிழர் கட்சி யின் தலைவர் வெண்மணி, திவிக நேரு தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர். பொள்ளாச்சியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. பொள்ளாச்சியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடை பெற்ற, இக்கருத்தரங்கில் திமுக, காங் கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, தமுமுக, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். இதில், தபெதிக பொதுச்செய லாளர் கு, ராமகிருட்டிணன், மாநில அமைப்பு செயலாளர் வெ.ஆறுச்சாமி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக் கறிஞர் வாஞ்சிநாதன், சிபிஎம் தாலுகா செயலாளர் மு.அன்பு, காங்கிரஸ் என்.கே.பகவதி, திமுக தென்றல் செல்வராஜ், மதிமுக குகன் மில் செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் வெ.சண்முகம், விசிக ச.பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம்
அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் தினம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சேலம் அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் தலைமையில் மாலை அணிவித்து சமத்துவ தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில், சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எம்.சேது மாதவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ந.திருவே ரங்கன், மாதர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.எம்.தேவி உள்ளிட்டோர் பங்கேற்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று, ஆத்தூர் பகுதியில் தாலுகா செயலாளர் ஏ. முருகேசன், மேட்டூர் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இளங்கோ, சேலம் உருக்காலை மைதானத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சியோடு, அம்பேத்கர் பிறந்தநாள் உறுதி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. சேலம் - இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 132ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சதீஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை பாசறை மாவட்ட செய லாளர் சுப்பிரமணி, ஒன்றிய செய லாளர் செல்வராஜ் மற்றும் சதா, கார்த்திக், ரமேஷ், சதீஷ், சங்கர், அன்பு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி, மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.