கோபி, ஜன.30- கோபியில் ததீஒமு சார்பில் சாதி யம் தகர்ப்போம் சாதியம் தகர்ப்போம், மனிதர்களாய் ஒன்றுபடுவோம் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபியில் சாதி யம் தகர்ப்போம், மனிதர்களாய் ஒன்று படுவோம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழனன்று நடை பயணம் நடைபெற்றது. இதில் ததீஒமு தாலுகா தலைவர் தனசிங் தலைமை வகித்தார். தாலுக்கா செயலாளர் கே. சி.ரங்கசாமி முன்னிலை வகித்தார். நடைபயணத்தை மாநில துணை செய லாளர் சி.கே.கனகராஜ் தொடங்கி வைத் தார். ஜீவா பணிமனையில் தொடங்கி புதுப்பாளையம், மொடச்சூர் சாலை வழியாக சென்று பேருந்து நிலையம் வந்தடைந்தது. நடைபயணத்தின் போது சாதியின் பெயரால் அவமதிப்பு கள், மோதல்கள், தீ வைப்புகள், உயிர் பறிப்புகள் இன்னும் பிற கொடுமை கள் தொடரக் கூடாது எனவே சாதியம் தகர்ப்போம், மனிதர்களாய் ஒன்றுபடு வோம், தீண்டாமை கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தீண் டாமை கொடுமைகளிலிருந்து மக்களை காப்போம் சாதிய பாகுபாடுகள் இன்றி சமத்துவம் மலரட்டும் என்பதை பொது மக்களிடையே எடுத்துரைத்து நடை பயணம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில், ததீஒமு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரி முத்து, ததீஒமு தாலுகா செயலாளர் க. பெருமாள், மாதர் சங்க தாலுகா செய லாளர் எஸ்.மல்லிகா மற்றும் கிருஷ்ண வேணி, வெங்கிடுசாமி, விதொச சார்பில் அய்யாசாமி, வெள்ளியங்கிரி, எம்.கே. நடராஜ், கே.ஆர்.வேலுச்சாமி, துலை சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.