ஈரோடு, ஜன.19- இந்திய பெருமுதலாளிகளின் எடுபிடியான பாஜகவை தோற்கடிக்க இந்திய தொழிலாளி வர்க்கம் களம் காண வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம் உரையாற்றினார். ஈரோடு மாவட்டம், அந்தியூர், கீழ்பவானியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் எம்.என்.காளியண்ணன் 28 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகே சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத் தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிறந்த நாளிற்கும், இறந்த நாளிற்கும் இடைப் பட்டதுதான் வாழ்க்கை என நினைக்கின்றனர். ஆனால், இறந்த பின்னும் வாழுகிற போராளி யாய் தோழர் எம்.என்.காளியண்ணன் போன் றோர் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் மனித குலத்திற்காக, தங்களை அர்ப்ப ணித்துக் கொண்டவர்கள். சுயநலமற்று போராடி யவர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள், பல புதிய உண்மைகளை, கருவிகளை, தத்துவங்க ளைக் கண்டுபிடித்தவர்கள். அதற்கு எடுத்துக் காட்டுகள் உலக சரித்திரத்தில் ஏராளமானோர் உள்ளனர். மக்களிடம் வசூல் செய்து நடத்துவதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், பாஜக போன்ற கட்சிகள் எங்கேயாவது வீடு வீடாக வசூல் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? தேர் தல் பத்திரங்கள் என்பதை உருவாக்கியவர் களே இவர்கள் தான். பெரிய கார்ப்பரேட் கம் பெனிகளிடம் கட்சிக்குத் தேவையான நிதியைப் பெறுவது, சட்டப்படி மோசடி செய்வது தான். அத்தகைய மோசடி வேலையை பாஜக செய்து கொண்டிருக்கிறது. இவர்கள், ஆட்சிக்கு வரும்போது அந்த கட்சியின் சொத்து மதிப்பு வெறும் 592 கோடி ரூபாய். ஆனால் இன்றைக்கு அதன் சொத்து மதிப்பு 5,230 கோடி ரூபாயாக உள் ளது. கிட்டதட்ட 10 மடங்கு, கடந்த 10 ஆண்டு காலத்தில் உயர்ந்துள்ளது. இந்திய மக்களின் பிரதிநிதியாக, பிரதமராக மோடி ஆளவில்லை. அதானியின் ஏஜன்ட் ஆகத்தான் மோடி செயல் படுகிறார். இந்திய பெருமுதலாளிகளின் எடுபிடி யாக இருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. புதிய ஆட்சி பதவி யேற்கவிருக்கிறது. வரவிருக்கும் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 148 எம்.பி.,க்களை கூட்டத்தொடர் முடி யும் வரை சஸ்பெண்ட் செய்தனர். இந்திய ஜனநா யகத்தில் இதுவரை எப்போதுமே இதுபோல நடந்ததாக கேள்விப்பட்டதில்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலே நாடாளுமன் றத்தை நடத்த நினைக்கின்றனர். இந்தியாவில் அரசியல் சாசனம் தான் ஆளுங்கட்சியை, எதிர்க் கட்சியை உள்ளிட்ட எல்லோரையும் வழி நடத்து கிறது. கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமையை வழங்கியி ருக்கிறது. மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை உரு வாக்கி வழிநடத்திக் கொண்டிருப்பது இந்திய அரசியல் சாசனம் தான். அத்தகைய அரசியல் சாசனம் அனைவரும் சமம் என்று சொல்கிறது. அனைவரும் சமம் என்பதை பாஜகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது நடை முறையில் இருக்கும் இந்திய அரசியல் சாசனம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, மநுதர்மத்தின் அடிப்படையிலான புதிய அரசியல் சாசனம் உரு வாக்க முனைகிறார்கள். இந்திய அரசாங்கம் என்பது மதச்சார்பற்றது. முருகனைப் பிடித்தி ருக்கிறது என்றால் முருகனை வணங்கலாம். நபி, வள்ளலார், ஏசு நாதரைப் பிடித்திருக்கிறது என்றால் அவர்களை பின்பற்றலாம், வழிபடலாம். அந்த மதச் சுதந்திரத்தை இந்திய அரசியல் சாச னம் அங்கீகரிக்கிறது. ஆனால் ஆளும் அரசாங் கம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சாதமாக தன்னு டைய அரசு அதிகாரத்தை, அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. கோவில் கட்டும் கமிட்டியினரே, கோவில் கட்டி முடிக்கப்படவில்லை. கட்டுமானப் பணி கள் முடிவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். ஆனால் கட்டி முடிக்கப்படாத கோவிலை ஏன் அவசர அவசரமாக திறக்கின்ற னர்? ஏனெனில் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் நாடு முழுவ தும் இருக்கும் இந்துக்களின் வாக்குகளை ராம ருடைய பெயரைக் காண்பித்து வாரிக் குவித்து விட வேண்டும் என்கிற அரசியல் நோக்கத்தைத் தவிர வேறு எந்த பக்தியும் ராமர் மேல் அவர் களுக்கு இல்லை. எப்படியாவது ஊரை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கி விடலாம் என நினைக் கின்றனர். கோவில் திறப்பு விழாவை தங்களு டைய அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன் படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அழைப்பு வந்த வுடனே அதை நிராகரித்து அறிக்கை விட்டார். அதன் பிறகே காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் நிராக ரித்தனர்.
பாஜகவினரின் ஒரே நோக்கம் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பது. பத்தியின் கார ணமாக திறப்பு விழா நடத்தப்படவில்லை. அரசி யல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறது என் பதை அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமை. நாடு அமைதியாக இருந்தால் பாஜக வினருக்கு பொறுக்காது. சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். முக்கிய மான பிரச்சனைகளில் மக்களின் கவனம் வரவே கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். ஏழை, எளிய மக்களைப் பற்றி கவலைப்படும் கட்சி அல்ல பாஜக. ஏழை எளிய, உழைப்பாளி மக்களின் பிரச்சனைகளைப் பற்றி நாள்தோறும் பேசிக் கொண்டிருக்கிற, போராடிக் கொண்டி ருக்கிற, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஆட்சி யாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற கட்சியாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான். கட்சி தோன்றிய காலம் முதல் உழைப்பாளி மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராடி வரும் கட்சியைப் வலுப்படுத் துங்கள் என்றார். முன்னதாக, இப்பொதுக்கூட்டத்தில் பவானி மற்றும் அந்தியூர் தாலுகா கமிட்டிகள் சார்பில் ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் கட்சி வளர்ச்சி நிதியை அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகே சன், பவானி தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக் கம் ஆகியோர் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகத்திடம் அளித்தனர். இந்நிகழ்வில், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனி சாமி, ஏ.எம்.முனுசாமி, ஆர்.கோமதி, கே.ஆர்.விஜயராகவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண் டனர். இறுதியாக அந்தியூர் தாலுகா கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி நன்றி கூறினார்.