தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
உதகை, ஏப்.3- நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெ ருமை, மான் உட்பட பல் வேறு வனவிலங்குகள் உள் ளன. சமீப காலமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இத னால், மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், ஞாயி றன்று மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு ஆடமனை பகுதி யில் உள்ள தேயிலை தோட் டத்தில் சிறுத்தை ஒன்று நட மாடியது. இதை பார்த்த விவ சாயிகள் சத்தம் போட்டு விரட் டினர். மேலும், சிறுத்தை உலா வந்ததை செல்போ னில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட னர். அது வைரலாக பரவி வருகிறது. தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை உலா வருவதால், வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச் சமடைந்து உள்ளனர்.
இரும்பு கதவு விழுந்ததில் ஒருவர் பலி
கோவை, ஏப்.3- கோவை, புலியகுளம், சவுரிபாளையம் சாலையைச் சேர்ந்தவர் பத்மநாபன் (58). பெயிண்டரான இவர், ராமநாத புரம் அப்புசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் இரும்பு கேட் மீது பெயிண்ட் அடித்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது இரும்பு கேட் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கி ருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பத்மநாபன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பத்மநாப னின் மகன் விஷ்ணுகோபால் ராமநாதபுரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பாதுகாப் பின்றி ஊழியரை பணியில் அமர்த்திய வீட்டு உரிமையாளர் செல்லமுத்து (64) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
ராணுவ வீரர்களின் குதிரை சாகசம்
உதகை, ஏப்.3- உதகை அருகே வெலிங்டனில் நடைபெற்ற ராணுவ வீரர் களின் குதிரை சாகசத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு கேட யம் வழங்கக்ப்பட்டது. இந்திய ராணுவத்தினர் போர் திறமை மட்டுமின்றி சாகச போட்டிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களுக்கு கடு மையான போர் பயிற்சியுடன் விளையாட்டு, மலையேறுதல், குதிரை சாசகம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரு கின்றன. இந்த பயிற்சிகளை ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, ராணுவ அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் பேரக்சில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் எம்ஆர்சி ராணுவ முகா மும், முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறும் ராணுவ பயிற்சி கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முப்படை அதிகாரிகளுக்கு குதிரை சவாரி வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயி றன்று ஜிம்கானா மைதானத்தில் மவுண்டன் ஜிம்கானா என்ற பெயரில் குதிரை சாகசம் நடைபெற்றது. முதல் முறையாக 6 பெண் வீராங்கனைகளும், 50க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் குதிரைக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, 4 ஜம்பிங், ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்பட பல்வேறு பிரிவு களில் நடந்த சாகசத்தில் வீரர், வீராங்கனைகள் அசத்தி னர். குதிரைகள் மீது ராணுவ வீரர்கள் அமர்ந்து சாகசத்தின் போது, துள்ளி குதித்து போட்டி போட்டுக்கொண்டு சீறி பாய்ந்து தடைகளை தாண்டி குதித்து சென்றது பார்வை யாளர்களை கவர்ந்தது. மேலும், சாகசத்தின் போது நெருப்பு வளையம் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது பாய்ந்து குதிரைகள் அசத்தின. குதிரையில் இருந்தவாறு ஈட்டி எறியும் போட்டியும் நடத்தப்பட்டது. குதிரை சாகசம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைக்கு கேட யம் வழங்கப்பட்டது.
லாரி கவிழ்ந்தது
தருமபுரி, ஏப்.3- ஆந்திராவிலிருந்து லாரி ஒன்று கேரளா, திருச்சூ ருக்கு சென்று கொண்டிருந் தது. இதனை நெல்லூரை சேர்ந்த விஜயகுமார் (37) என்பவர் ஓட்டி சென்றார். இத னிடையே லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் வந்த போது, பின்னால் வந்த லாரி ஒன்று, இந்த லாரி மீது மோதி யதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இவ் விபத்தில் ஓட்டுநர் விஜயகு மார் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த தொப் பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, லாரியை அங்கிருந்து அப்புறப்படுத் தினர்.
பாஜக நிர்வாகி மீது நகர மன்ற தலைவர் புகார்
பாஜக நிர்வாகி மீது நகர மன்ற தலைவர் புகார் அவிநாசி,ஏப்.3- திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்தை பற்றி முகநூ லில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது நகர மன்ற தலை வர் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருமுருகன் பூண்டி நகர மன்ற தலைவர் குமார் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, திருமுருகன் பூண்டி நகராட்சியை பொறுத்தவரை தமிழக அரசின் நலத்திட் டங்கள் அனைத்தும், துறை அமைச்சர்களின் அறிவுறுத்தல் படி டென்டர்கள் அனைத்தும் இணையத்தில் அறிவிக்கப் பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகி றது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு செயலாளர் சண்முகபாபு சமூக வலைத்தளங்களில் அரசு நட வடிக்கைகளுக்கு எதிராக கருத்துப் பரப்பி மக்களிடம், அர சுக்கு அவப்பெயரை தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ச் சியாக அவதூறு செய்திகளை பரப்பி வரும் சண்முகபாபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தாராபுரம், ஏப்ரல் 3 - தாராபுரம் அடுத்த உப்பாறு அணையில் இருந்து பாசனத் திற்கு தண்ணீரை அமைச்சர்கள் திறந்து விட்டனர். இதில் விவ சாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தாராபுரம் அடுத்துள்ள உப்பாறு அணையில் இருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்றது. வலது மற்றும் இடது கரையிலி ருந்து அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட்டனர். அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வலது கரை கால்வாயில் இருந்து வினா டிக்கு 72 கன அடி வீதமும், இடது கரை கால்வாயில் இருந்து வினாடிக்கு 105 கன அடி வீதமும் மொத்தம் 177 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. தொடர்ந்து 10 ஆம் தேதி வரை தண் ணீர் திறந்துவிட அரசு உத்திரவிட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு நிலை நகராட்சி
தாராபுரம், ஏப்.3- தாராபுரம் நகராட்சி பகுதி யில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1.5 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் நக ராட்சி பகுதியில் உள்கட்ட மைப்பு வசதிகள், சாலைவச திகள், குடிநீர் வசதிகள் உள் ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகி றது. இந்நிலையில் நகராட் சியை தேர்வு நிலை நகராட் சியாக தரம் உயர்த்த கோரி நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் தமிழ் நாடு முதல் அமைச்சருக்கு கோரிக்கையை வைத்தனர். அதனை ஏற்று நேற்று சட்ட மன்ற மானிய கோரிக்கை யின் போது தாராபுரம் நக ராட்சி, தேர்வு நிலை நகராட்சி யாக தரம் உயர்த்தி அறிவிக் கப்பட்டது.
உடுமலையில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகள்
உடுமலை, ஏப்.3- உடுமலையில், காட்டு விலங்குகள் விவ சாய விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில், தற்பொழுது விவசாயிகளையும் தாக்கி வருகிறது. வனத்துறையினர், விவசா யிகளின் பயத்தைப்போக்கும் வகையில் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், காட்டு விலங்குகள் உணவு மற் றும் குடிநீர் தேடி மலை அடிவார பகுதிக ளுக்கு வருகிறது. இப்பகுதியில், சில வாரங் களாக காட்டு யானைகள் தென்னை மரங் களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜல்லிபட்டி கொங்குரர் குட்டை, பொன்லாமன் சோலை, அமராவதி உள்ளிட்ட பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள குழாய்களை காட்டு யானைகள் சேதப் படுத்தி உள்ளது. ஏற்கனவே காட்டுப்பன்றி கள் மலை அடிவார பகுதியிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடிமங்க லம் ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயிகளை தாக்கி வருவது முடிவுக்கு வராத நிலை யில், தற்பொழுது காட்டு யானைகளும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கோடை காலம் தொடங்கிய நிலையில் காட் டுப் பகுதியில் உள்ள விலங்குகள் விளை நிலங்களுக்கு வர தொடங்கியுள்ளது. வனத் துறையினர் காடுகளில் காட்டு விலங்குக ளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், மலைப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வராத முடியாத வகை யில் மலையடிவார பகுதியில் தடுப்பு வேலி அல்லது அகலிகள் அமைத்து வன விலங்கு கள் விளை நிலங்களுக்கு வராத வகையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விளை பயிர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றார்கள்.
சுமையை அதிகப்படுத்தும் மின்வாரிய அறிவிப்புகள் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து
உடுமலை, ஏப்.3- உடுமலை மின்வாரிய அலுவலகத் திலிருந்து ஒரு வாரமாக ஜனவரி மாதம் செலுத்திய மின்கட்டணத்தை நடப்பு மாதமும் செலுத்த வேண்டும் என்ற அறி விப்பு வருகிறது. இந்த அறிவிப்புகள் பொது மக்களுக்கு பெரும் சுமையை ஏற் படுத்தும் வகையில் உள்ளது. உடுமலை மின்வாரியத்தில் இருந்து வரும் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்புகளில், சில பகுதி மக்கள் ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை இந்த மாதம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வந்துள் ளது. மின் கணக்கீடு செய்யும் மின் வாரிய ஊழியர்களை வேறு வேலைக்கு பயன்படுத்தியது தான் இதற்கு கார ணம் என்று தெரிய வருகிறது. தொடர்ந்து நான்கு மாதங்களாக மின் கணக்கீடு செய்யப்படாமல் உள்ளதால், மாதம் கணக்கீடு செய்யும் போது மின் உபயோகம் அதிகமாக வரும். இத னால், பல மடங்கு அதிகமாக மின் கட்ட ணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. மேலும், இது கோடை காலம் என்பதால் வழக்கமாக மின் தேவையை விட அதிகமாக இருக்கும். மின்வாரியத்தின் இந்த செயல் பொது மக்களுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தும். தேர் தல் காலத்தில் மாதம் மாதம் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப் புக்கு மாறாக மின் வாரியத்தின் இந்த செயல் உள்ளது. இது குறித்து மின் வாரிய உறுப் பினர்களை கேட்ட போது, ஒரு வித மான சோர்வுடன் தான் மின் வாரியத்தில் வேலை செய்வதாகவும், வாரியத்தில் இருக்கும் அனைத்து பிரிவு ஊழியர் களுக்கும் தற்பொழுது முக்கியமாக செய்ய வேண்டிய வேலை, மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப் பது தான். இந்த வேலையில் ஈடுபடுவ தால், வேறு வேலைகள் செய்ய முடிவது இல்லை. மேலும், மின் வாரியத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஆட்கள் பற் றாக்குறை உள்ளதும் ஒரு காரணம் என்ற னர்.
காட்டெருமையை துரத்திய புலி
உதகை, ஏப்.3- காட்டெருமையை துரத்தி புலி வேட்டையாட முயற்சித்த சம்பவத்தை முதுமலை சென்ற சுற்றுலா பயணிகள் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதுமலை வனப்பகுதியில், தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள், வனத்துறையினரின் உதவியுடன், வனப்பகுதி களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். வனப் பகுதிகளுக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் யானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்கு களை காண்கின்றனர். குறிப்பாக மாமிச விலங்குகள் வேட்டை யாடுவதை காண்பது மிகவும் கடினம். இந்நிலையில், முது மலை வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் புலி ஒன்று காட்டெருமையை துரத்தி வேட்டையாட முயலும் காட்சியை படம் பிடித்துள்ளனர். வேகமாக காட்டெரு மையை துரத்திய புலி சிறிது தூரம் காட்டெருமையை துரத்தி யது. கண்ணிமைக்கும் நேரத்தில் காட்டெருமை புலியிட மிருந்து தப்பியது. தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
சாதி, மதத்தை வெளிப்படுத்தும் பொருட்களை விற்காதீர்
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்
நாமக்கல், ஏப்.3- தமிழக அரசால் தடை செய்யப் பட்ட பொருட்களை விற்க வேண்டாம் எனவும், சாதி, மத அடையாளங் களை வெளிப்படுத்தும் பொருட் களை ஒருபோதும் விற்க வேண்டாம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலை வர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட் டத்தில் ஒரு சில பகுதிகளில் கடை களில், தமிழக அரசால் தடை செய்யப் பட்ட லாட்டரி மற்றும் அதிஷ்ட கூப் பன்கள் விற்பனை செய்வதாக புகார் கள் எழுந்துள்ளது. இதுபோன்ற சட் டத்திற்கு புறம்பாக செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற வணி கத்தை வணிகர்கள் தவிர்க்க வேண் டும். மேலும், இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் செயல்படக்கூடாது என போலீசாரின் அறிவிப்பை மீறி, ஒரு சில கடைகள் இரவு நேரங்க ளில் தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக பேக்கரி, டீக்கடை மற்றும் ஹோட்டல்கள் இயங்கு வது, சமூகவிரோதிகளுக்கு சாதக மான சூழலை உருவாக்கி உள்ளது. மேலும், கதவுகள் இல்லாமல் செயல் படும் அனைத்து பேக்கரிகளும், கத வுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு டன் தங்கள் வணிகத்தை தொடர வேண்டும். பள்ளிகளுக்கு மிக அருகே உள்ள பெட்டி கடைகள் “மளிகை கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்களில் சாதி அடையாளங் களை வெளிப்படுத்தும் வகையி லான கயிறு, ஸ்டிக்கர் மற்றும் டி-ஷர்ட் போன்ற பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். சாதி மத இன மொழி, அரசிய லுக்கு அப்பாற்பட்டு இயங்கும் வணி கர் சங்கங்களின் பேரமைப்பிற்கு, சமூக அக்கரையில் எப்போதும் பெரும் பங்கு உண்டு. எனவே, தமிழக அர சின் விதிமுறைக்குட்பட்டு அனைத்து கடை வியாபாரிகளும் மாவட்ட போலீ சாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
யானை தாக்கியதில் பெண் படுகாயம்
தருமபுரி, ஏப்.3- பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே யானை தாக்கியதில் பெண்மணி படுகாயம் சிகிச்சைக்காக மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தருமபுரி பஞ்சப்பள்ளியை அடுத்த புல் வெளிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி வசந்த்ரா இவர் காலையில் விவசாய பணிக்காக தோட் டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பின்னால் வந்த இரண்டு யானைகளில் ஒரு யானை வசுந்த்ராவை தாக்கியுள்ளது. வசுந்த் ராவின் அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் அங்கு ஓடி வந்து கூச்சலிட்டதில் யானை அங்கு இருந்து சென்றது. உடனடியாக காயம் பட்ட வசுந்த்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பஞ்சப்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்கு இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் வசந்தராவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்: மின்வேலி அமைக்க மானியம் வழங்கிடுக
விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயிகள் வலியுறுத்தல் பொள்ளாச்சி, ஏப். 3- விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த மின் வேலி அமைக்க மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொள்ளாச்சி அடுத்துள்ள கோடங்கி பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், கோடங்கிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாய நிலங்களில் தற்போது மரவள்ளி கிழங்கு வாழை தக்காளி மக்காசோள பயிர்கள் பயிரிட்டு உள்ளோம். கடந்த சில வருடங்களாக மயில், காட்டுப்பன்றி, மான் ஆகிய வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காலையில் நிலத்தை உழுது பயிரிட்டால் இரவு நேரத்தில் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சென்று விடுகிறது. இதனால், ஒவ்வொரு முறையும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவைகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் விவசாயிகள் எடுத்தாலும் பலனில்லை, சேதம் ஏற்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரம் காக்க தோட்டங்களுக்கு மின் வேலி அமைக்க மானியம் வழங்க வேண்டுமென தெரிவித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் வனத் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை களை அதிகாரிகளுக்கு பரிந்துரைப்ப தாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.
தண்டவாள பராமரிப்பு
கோவை, ஏப்.3- கோவை ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் இடையே உள்ள இரட்டை தண்டவாள பராம ரிப்பு பணிகள் தொடங்கியது. இதற்காக தண்டவாளத்தில் போடப்பட்டுள்ள ஜல்லி கற் கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்பட்டன. அதில் ஏதேனும் குறைபாடு கள் உள்ளதா? என கண்ட றிந்து சரி செய்யும் பணியில் 10க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். தற் போது இந்த தண்டவாளத் தில் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கோவை - மேட் டுப்பாளையம் இடையே ரயில் சேவை ஏப்.9 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட் டுள்ளது என ரயில்வே அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
உதகையில் தேயிலை கண்காட்சி
உதகை, ஏப்.3- உதகையில் தேயிலை கண்காட்சி நடத்த முடிவு செய் துள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். குன்னூர் இந்திய தேயிலை வாரியத்தின் 70 ஆவது ஆண்டு விழா குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில், தென்னிந்திய தேயிலை வாரியத் தின் செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளராக தேயிலை வாரியத்தின் முன்னாள் துணைச்செயலாளர் ரங்கையா கலந்து கொண் டார். அப்போது, விழாவை துவக்கி வைத்து தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் முத்துக்குமார் பேசு கையில், அனைத்து சிறு, குறு விவசாயிகளும், தோட்ட அதிபர்களும், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்க ளும், வியாபாரிகளும், ஏலம் எடுப்பவர்களும் அனைவரும் ஒன்றிணைந்து தேயிலை வாரியத்துடன் இணைந்து செயல்பட்டால் தேயிலையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும். நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் சுற்றுலா பயணி கள் வந்து செல்கின்றனர். ஒரு மாதங்களில் குன்னூர், உதகை, கோத்தகிரி போன்ற இடங்களில் மலர் கண்காட்சி. காய்கறி கண்காட்சி. பழக்கண்காட்சி போன்றவை நடக்கிறது. அதுபோல தேயிலை கண்காட்சியும் நடத்த முடிவு செய் துள்ளோம். அதைப்பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசி நல்ல முடிவு எடுத்து, குன்னூரில் உள்ள காட்டேரி பூங்கா, கோத்த கிரி மற்றும் உதகை ஆகிய இடங்களில் எங்கு வைப்பது? என்று முடிவு செய்து விரைவில் தேயிலை கண்காட்சி வைக்க ஏற் பாடு செய்யப்படும், என்றார். இவ்விழாவில் தேயிலை வாரிய உறுப்பினர்கள் தனஜெயம், ராஜேஷ் மற்றும் ஏராளமான சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தொடரும் ஜிஎஸ்டியின் கொடூர தாக்குதல் - போசியா வேதனை
கோவை, ஏப்.3- ஜிஎஸ்டியின் கொடூர தாக்குதல் தொடர்வதாக, கோவை தொழில் அமைப் புகளின் கூட்டமைப்பான போசியா வேதனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போசியா அமைப் பின் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து, தொடர்ந்து தொழில் துறையி னர் அரசிடம் எடுத்துக் கூறி வருகி றோம். ஆனாலும், எவ்விதமான நடவ டிக்கை இல்லாதது குறு சிறு தொழில் களை முடக்கி வருகிறது. இப்பொழுது, புதிய பிரச்சினையாக தமிழகத்தைச் சார்ந்த அதிகாரிகள் ஜிஎஸ்டி பில்லில் உள்ள சிறு சிறு குறைகளை கண்டறிவ தும், அதற்காக பல லட்சங்கள் அபராத விதிக்கின்றனர். இது தொழில் துறை யினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக் குகியுள்ளது. அருகாமையில் இருக்கக் கூடிய எடை மெஷின் வெயிட் பார்த்து பில் போடுவதாக சென்றால் கூட, ஈ வே பில் போடவில்லை என்று சொல்லி அப ராத விதிக்கின்றனர். பில்லில் ஏற்படு கின்ற சின்ன சின்ன எழுத்து பிழைக்கும் கூட அபராத விதிப்பதும், கம்பெனி பகுதியில் அதிகாரிகள் வட்டம் இடுவது, வாகனங்களை மறித்து அபராதம் விதிப் பது என தொடர்ந்து தொழில்களை முடக்கி வருகின்றார்கள். தமிழகத்தில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை திட்டமிட்டு குறு சிறு தொழில்களை முறையாக தொழில் செய்து வருகின்ற உற்பத்தி துறை முடக் குவதற்காக நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பொருள்கள் பில் இல்லாமல் வடமாநில பொருட்கள் விற் பனை செய்வதும், கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி பில் போடாமல் நடக்கின் றது. அதையெல்லாம் பிடிக்காமல், முறையாக தொழில் செய்து கொண்டி ருக்கின்ற உற்பத்தி துறைக்கு நெருக்கடி கொடுப்பது என்பது கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்கொலை முயற்சி
திருப்பூர், ஏப்.3- திருப்பூர், கொடிகம்பம், வ.உ,சி நகரைச் சேர்ந்தவர் கோவில் பூசாரி தனசேகரன். இவர் மீது வடக்கு காவல் துறையினர் பொய்யாக கஞ்சா வழக்கில் கைது செய் துள்ளதாக கூறி, அவரது மனைவி ஜான்சிராணி மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற் கொலைக்கு முயன்றார். இதை யடுத்து அங்கு பாதுகாப் புக்கு நின்றிருந்த போலீசார், அவரது உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.