districts

img

சட்டப்படி ஊதியம் வேண்டும்: சுகாதார திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 15 – தேசிய சுகாதார திட்ட ஊழியர்க ளுக்கு சட்டப்படியான ஊதியம் வழங் காமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு  மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு  பிரிவுகளில் வேலை செய்யும் தேசிய  சுகாதார திட்ட (என். எச்.எம்) ஊழியர்க ளுக்கு அவரவர் பிரிவுகள், தகுதிக ளுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் குறைந் தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட் டப்படியான ஊதியம் கணக்கிட்டு வழங் காமல் குறைத்தே வழங்கப்படுகிறது.

குறிப்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் மேற்கண்ட என்.எச்.எம் ஊழியர்க ளுக்கு சட்டப்படி, மாத ஊதியம் ரூ.18 ஆயிரத்தி 850ஐ வழங்கிட உத்தரவு பிறப்பித்து 6  மாதங்களாகியும், இது வரையில் வழங்காமல் ரூ.8 ஆயிரத்து  500 மட்டுமே கணக்கிட்டு வழங்கப்படுகி றது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட  மருத்துவத்துறை என்.எச்.எம் மற்றும்  சுகாதார ஊழியர் சங்கம் சார்பில் வெள் ளியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வித்யா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ மாவட்ட பொதுச்செயலாளர் கே.ரங்கராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  இதில் திரளான என்.எச்.எம் ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.