தருமபுரி, ஜூலை 27- மக்கள் விரோத நிதிநிலை அறிக் கையை தாக்கல் செய்த ஒன்றிய அர சைக் கண்டித்து, நாமக்கலில் 5, தரும புரியில் 3 இடங்களில் இடதுசாரி கட்சி கள் சார்பில் மறியல் நடைபெற உள் ளது. ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண் டித்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று தமிழ் நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட் சிகள் சார்பில் மறியல் நடைபெற உள் ளது. ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் உட்பட அனைத்து தரப்பு பொதுமக்க ளும் இப்போராட்டத்திற்கு பேராதரவு அளிக்க வேண்டுமென்றும் இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இதன்தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட் டக்குழு அலுவலகத்தில் இடதுசாரி கட் சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.தேவராஜன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அ.குமார், மாநி லக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாவட்டச் செயலா ளர் கே.கோவிந்தராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், அரூர் ஆகிய மூன்று மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடைபெறும் மறியலில் பெருந்திரளானோர் பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் இதேபோன்று, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு அலு வலகத்தில் சனியன்று நடைபெற்ற இக் கூட்டத்திற்கு, சிபிஐ நகரச் செயலாளர் எஸ்.சுகுமார் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சிபிஐ மாவட்டச் செய லாளர் க.அன்புமணி. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோ கன், கே.தங்கமணி, சு.சுரேஷ், நகரச் செயலாளர் ஐ.ராயப்பன், சிபிஐ மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி.கே.சுப்ர மணி, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று நாமக்கல், குமார பாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய இடங்களில் ஒன்றிய அரசு அலு வலகம் முன்பு மறியல் போராட்டம் நடத் துவது என முடிவு செய்யப்பட்டது.