கொல்கத்தா, மே 15-மேற்குவங்கத்தில் இடது முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு, வடக்கு கொல்கத்தா, டம்டம் தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பெரும் ரோடு ஷோக்கள் நடத்தப்பட்டன. வடக்கு கொல்கத்தாவில் சிபிஎம் வேட்பாளர் கானீனிகா போஸின் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் (ரோடு ஷோ) கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.கானீனிகா போஸ் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேற்கு வங்க மாநிலச் செயலாளராவார். வடக்குகொல்கத்தாவில் டன்லப் சிடியா மூடிலிருந்து தொடங்கிய ரோடு ஷோவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.மேற்கு கொல்கத்தாவில் சிபிஎம் வேட்பாளர் டாக்டர் . நந்தினி முகர்ஜியின் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி கிதர்பூர் மார்கெட் அருகில் நிறைவு பெற்றது. அதுபோல் டம்டம் தொகுதியில் நிம்தா கால்சர் ஜங்சன் முதல் பிராட்டி சரத் காலனி வரை பேரணி நடந்தது. இந்த தொகுதியில் இடது முன்னணி வேட்பாளராக சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் நேப்பாள் தேவ் பட்டாச் சார்யா போட்டியிடுகிறார். இந்த 3 தொகுதிகளிலும் வலுவான பிரச்சா ரத்தை இடது முன்னணி நடத்தி வரு கிறது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இறுதியாக நடக்கும் 7ஆம் கட்டத்தில் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
200 மையங்களில் மறுவாக்குப்பதிவு தேவை
மேற்குவங்கத்தில் ஞாயிறன்று நடந்த வாக்குப்பதிவின்போது பரவலாக வன்முறைகளும், வாக்குச்சாவடி கைப்பற்றலும் நடந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு இடது முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அதிக அளவில் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்ட நந்தி கிராமம், ஹால்டியா சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் உட்பட 200 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்கு பதிவுநடத்துமாறு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அமை ச்சர்களே தலைமை தாங்கி வாக்குப் பதிவு மையங்களை கைப்பற்றல் மற்றும் வன்முறைகளை நடத்தினர். திங்களன்று ஜாதவ்பூர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்க விருந்த கூட்டத்திற்கு மாநில அரசு அனுமதி மறுத்தது. அமித்ஷாவின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டதால் அவரது 3 கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து திரிணாமுல்-பாஜக தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல்கள் நடந்தன.